FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, December 21, 2018

கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு புகைப்பட கலை பயிற்சி

20.12.2018, சேலம்: 
சேலம், கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகையுடன், நவீன புகைப்பட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் காலம் ஒரு மாதம். கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது, 18 முதல், 45 வரை இருக்க வேண்டும். படத்தொகுப்பு, ஒளி, ஒலி அமைப்பு கலை, நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெறலாம். முதல்கட்டமாக, ஆண், பெண்கள், 50 பேருக்கு, பஸ் பயண கட்டண சலுகை அட்டையுடன், சேலத்தில் பயிற்சி அளிக்கப்படும். வரும், 26க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment