FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, December 12, 2018

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

11.12.2018
திருச்சி,
ரெயில் நிலைய அளவில் மாற்றுத்திறனாளி நலகமிட்டி அமைக்க வேண்டும். வீல் சேர் வசதி, தடையில்லா பிளாட்பார வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வண்டிகளுக்கு இலவச பார்க்கிங் வசதி, இலவச கழிப்பிட வசதி, ஓய்வெடுக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் ஏறி ஆக்கிரமித்து கொள்வதை தடுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டி பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.Coverfox.com

திருச்சி ரெயில் நிலையத்தில் இயங்கும் பேட்டரி காரில் செல்வதற்கு ரூ.30 கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், திருச்சி புறநகர் தலைவர் குமார், செயலாளர் ரவி, பொருளாளர் சுப்பிரமணி, மாநகர் செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டர், ஊன்றுகோல், 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றுடன் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் வழங்கினர்.

No comments:

Post a Comment