FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, December 5, 2018

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், டிச. 5-–
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி, 69 பயனாளிகளுக்கு ரூ.15,51,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களது திறமை வெளிகாட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு வேகமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை ரூ.68 ஆயிரம், நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒரு நபருக்கு ரூ.1000 காசோலையாகவும் மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

2018–19 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் மானியமாக 10 நபர்களுக்கு கறவைமாடு, துணி வியாபாரம், பெட்டிக்கடை, இட்லி கடை, உள்ளிட்ட தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சமும், 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் 8 நபர்களுக்கு ரூ.90,100க்கும் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் (ஒன்றின் மதிப்பு ரூ.7240) ரூ.72,400 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் கால்கள் செயலிழந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு ரூ.5,910- வீதம் சக்கர நாற்காலி மொத்தம் ரூ.59,100 மதிப்பில் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.24,600 மதிப்பில் 10 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது பின்புறம் அணியும் 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment