FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, December 5, 2018

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், டிச. 5-–
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி, 69 பயனாளிகளுக்கு ரூ.15,51,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களது திறமை வெளிகாட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு வேகமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை ரூ.68 ஆயிரம், நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒரு நபருக்கு ரூ.1000 காசோலையாகவும் மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

2018–19 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் மானியமாக 10 நபர்களுக்கு கறவைமாடு, துணி வியாபாரம், பெட்டிக்கடை, இட்லி கடை, உள்ளிட்ட தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சமும், 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் 8 நபர்களுக்கு ரூ.90,100க்கும் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் (ஒன்றின் மதிப்பு ரூ.7240) ரூ.72,400 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் கால்கள் செயலிழந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு ரூ.5,910- வீதம் சக்கர நாற்காலி மொத்தம் ரூ.59,100 மதிப்பில் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.24,600 மதிப்பில் 10 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது பின்புறம் அணியும் 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment