FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, December 5, 2018

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், டிச. 5-–
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி, 69 பயனாளிகளுக்கு ரூ.15,51,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களது திறமை வெளிகாட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு வேகமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை ரூ.68 ஆயிரம், நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒரு நபருக்கு ரூ.1000 காசோலையாகவும் மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

2018–19 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் மானியமாக 10 நபர்களுக்கு கறவைமாடு, துணி வியாபாரம், பெட்டிக்கடை, இட்லி கடை, உள்ளிட்ட தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சமும், 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் 8 நபர்களுக்கு ரூ.90,100க்கும் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் (ஒன்றின் மதிப்பு ரூ.7240) ரூ.72,400 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் கால்கள் செயலிழந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு ரூ.5,910- வீதம் சக்கர நாற்காலி மொத்தம் ரூ.59,100 மதிப்பில் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.24,600 மதிப்பில் 10 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது பின்புறம் அணியும் 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment