FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 5, 2018

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், டிச. 5-–
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி, 69 பயனாளிகளுக்கு ரூ.15,51,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களது திறமை வெளிகாட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு வேகமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை ரூ.68 ஆயிரம், நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒரு நபருக்கு ரூ.1000 காசோலையாகவும் மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

2018–19 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் மானியமாக 10 நபர்களுக்கு கறவைமாடு, துணி வியாபாரம், பெட்டிக்கடை, இட்லி கடை, உள்ளிட்ட தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சமும், 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் 8 நபர்களுக்கு ரூ.90,100க்கும் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் (ஒன்றின் மதிப்பு ரூ.7240) ரூ.72,400 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் கால்கள் செயலிழந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு ரூ.5,910- வீதம் சக்கர நாற்காலி மொத்தம் ரூ.59,100 மதிப்பில் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.24,600 மதிப்பில் 10 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது பின்புறம் அணியும் 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment