FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 2, 2025

தாம்பரம் | வாய் பேச முடியாத மாற்று திறனாளி கொலை வழக்கில் 3 பேர் கைது



02.01.2024 தாம்பரம்: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியை கொலை செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலையூர், இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்​ரீஷியன் சூர்யா (21) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்​தினம் மப்பேடு–ஆலப்​பாக்கம் பிரதான சாலை​யில் புத்​தூர் அருகே காலி இடத்​தில் கை கால் கட்டப்​பட்டு கழுத்​தறுக்​கப்​பட்ட நிலை​யில் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இது தொடர்பாக சேலை​யூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அகரம்​தென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபரி​கணேசன் (25), சேலை​யூர் குட்​டக்​கரையை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் (26), குரோம்​பேட்டை கோதண்டம் நகரை சேர்ந்த விஜயபிர​தாப் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

சேலை​யூர் இந்திரா நகர் அருகே உள்ள ‘டாஸ்​மாக்’ கடையில், சூர்யா, சபரி கணேஷ், ஐயப்பன் ஆகியோர் ஆட்டோ​வில் மது அருந்​தி​யுள்​ளனர். இதையடுத்து மூவருக்​கும் இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தால் குரோம்​பேட்​டை​யில் உள்ள விஜயபிர​தாப் வீட்டுக்கு சென்​றுள்​ளனர். அங்கு 4 பேரும் சேர்ந்து மீண்​டும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்​டுள்​ளது.

இதில், ஆத்திரமடைந்த சபரி கணேசன் வீட்​டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சூர்​யாவை அடித்​ததோடு கத்தி​யால் கழுத்தை அறுத்​துள்ளார். தொடர்ந்து ஐயப்​பனும் கழுத்தை அறுத்​துள்ளார். விஜயபிர​தாப் குழவி கல்லால் தாக்கி​யுள்​ளார்.

இதில் சூர்யா ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​துள்ளார். செய்​வதறியாத நிலை​மை​யில் இருந்த மூன்று பேரும் ரத்த வெள்​ளத்​தில் இருந்த சூர்யா உடலை வீட்​டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்​டிக் கவர்​களால் கட்டி மப்பேடு ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் புதர் என்று நினைத்து சாலை​யோரம் வீசி​விட்டு சென்றது ​விசா​ரணை​யில்​ தெரியவந்​தது.



No comments:

Post a Comment