FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 2, 2025

தாம்பரம் | வாய் பேச முடியாத மாற்று திறனாளி கொலை வழக்கில் 3 பேர் கைது



02.01.2024 தாம்பரம்: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியை கொலை செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலையூர், இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்​ரீஷியன் சூர்யா (21) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்​தினம் மப்பேடு–ஆலப்​பாக்கம் பிரதான சாலை​யில் புத்​தூர் அருகே காலி இடத்​தில் கை கால் கட்டப்​பட்டு கழுத்​தறுக்​கப்​பட்ட நிலை​யில் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இது தொடர்பாக சேலை​யூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அகரம்​தென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபரி​கணேசன் (25), சேலை​யூர் குட்​டக்​கரையை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் (26), குரோம்​பேட்டை கோதண்டம் நகரை சேர்ந்த விஜயபிர​தாப் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

சேலை​யூர் இந்திரா நகர் அருகே உள்ள ‘டாஸ்​மாக்’ கடையில், சூர்யா, சபரி கணேஷ், ஐயப்பன் ஆகியோர் ஆட்டோ​வில் மது அருந்​தி​யுள்​ளனர். இதையடுத்து மூவருக்​கும் இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தால் குரோம்​பேட்​டை​யில் உள்ள விஜயபிர​தாப் வீட்டுக்கு சென்​றுள்​ளனர். அங்கு 4 பேரும் சேர்ந்து மீண்​டும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்​டுள்​ளது.

இதில், ஆத்திரமடைந்த சபரி கணேசன் வீட்​டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சூர்​யாவை அடித்​ததோடு கத்தி​யால் கழுத்தை அறுத்​துள்ளார். தொடர்ந்து ஐயப்​பனும் கழுத்தை அறுத்​துள்ளார். விஜயபிர​தாப் குழவி கல்லால் தாக்கி​யுள்​ளார்.

இதில் சூர்யா ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​துள்ளார். செய்​வதறியாத நிலை​மை​யில் இருந்த மூன்று பேரும் ரத்த வெள்​ளத்​தில் இருந்த சூர்யா உடலை வீட்​டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்​டிக் கவர்​களால் கட்டி மப்பேடு ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் புதர் என்று நினைத்து சாலை​யோரம் வீசி​விட்டு சென்றது ​விசா​ரணை​யில்​ தெரியவந்​தது.



No comments:

Post a Comment