FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, January 2, 2025

தாம்பரம் | வாய் பேச முடியாத மாற்று திறனாளி கொலை வழக்கில் 3 பேர் கைது



02.01.2024 தாம்பரம்: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியை கொலை செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலையூர், இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்​ரீஷியன் சூர்யா (21) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்​தினம் மப்பேடு–ஆலப்​பாக்கம் பிரதான சாலை​யில் புத்​தூர் அருகே காலி இடத்​தில் கை கால் கட்டப்​பட்டு கழுத்​தறுக்​கப்​பட்ட நிலை​யில் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இது தொடர்பாக சேலை​யூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அகரம்​தென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபரி​கணேசன் (25), சேலை​யூர் குட்​டக்​கரையை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் (26), குரோம்​பேட்டை கோதண்டம் நகரை சேர்ந்த விஜயபிர​தாப் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

சேலை​யூர் இந்திரா நகர் அருகே உள்ள ‘டாஸ்​மாக்’ கடையில், சூர்யா, சபரி கணேஷ், ஐயப்பன் ஆகியோர் ஆட்டோ​வில் மது அருந்​தி​யுள்​ளனர். இதையடுத்து மூவருக்​கும் இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தால் குரோம்​பேட்​டை​யில் உள்ள விஜயபிர​தாப் வீட்டுக்கு சென்​றுள்​ளனர். அங்கு 4 பேரும் சேர்ந்து மீண்​டும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்​டுள்​ளது.

இதில், ஆத்திரமடைந்த சபரி கணேசன் வீட்​டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சூர்​யாவை அடித்​ததோடு கத்தி​யால் கழுத்தை அறுத்​துள்ளார். தொடர்ந்து ஐயப்​பனும் கழுத்தை அறுத்​துள்ளார். விஜயபிர​தாப் குழவி கல்லால் தாக்கி​யுள்​ளார்.

இதில் சூர்யா ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​துள்ளார். செய்​வதறியாத நிலை​மை​யில் இருந்த மூன்று பேரும் ரத்த வெள்​ளத்​தில் இருந்த சூர்யா உடலை வீட்​டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்​டிக் கவர்​களால் கட்டி மப்பேடு ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் புதர் என்று நினைத்து சாலை​யோரம் வீசி​விட்டு சென்றது ​விசா​ரணை​யில்​ தெரியவந்​தது.



No comments:

Post a Comment