FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 1, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தேர்வு





29.12.2024 விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தேர்வு குறித்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் பிற சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற அவர்கள் பிற துறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அளவில் சேவைகளை வழங்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம். மயிலம், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசுக் கட்டடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை மாநில மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலர் அகியேசர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, மாவட்டத் திட்ட அலுவலர் (உரிமைகள் திட்டம்) சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment