FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 1, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தேர்வு





29.12.2024 விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தேர்வு குறித்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் பிற சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற அவர்கள் பிற துறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அளவில் சேவைகளை வழங்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம். மயிலம், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசுக் கட்டடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை மாநில மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலர் அகியேசர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, மாவட்டத் திட்ட அலுவலர் (உரிமைகள் திட்டம்) சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment