FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, January 1, 2025

தாம்பரத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை கொன்றது யார்?



31.12.2024 
சென்னை:
தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்குள்ள குடோன் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, இறந்து கிடந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கை, கால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் ஸ்குவாட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாய் பேச முடியாதவர்

மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது, இறந்து கிடந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும், சூர்யா பிறவிலேயே காது கேட்கும் திறனற்றவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா வீட்டிற்கு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரமா

இதையடுத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூர்யாவை யார் கழுத்தறுத்து கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? ஏதாவது காதல் விவகாரமா போன்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் ஆட்டோ வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்ததால் அது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment