FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 1, 2025

தாம்பரத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை கொன்றது யார்?



31.12.2024 
சென்னை:
தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்குள்ள குடோன் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, இறந்து கிடந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கை, கால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் ஸ்குவாட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாய் பேச முடியாதவர்

மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது, இறந்து கிடந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும், சூர்யா பிறவிலேயே காது கேட்கும் திறனற்றவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா வீட்டிற்கு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரமா

இதையடுத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூர்யாவை யார் கழுத்தறுத்து கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? ஏதாவது காதல் விவகாரமா போன்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் ஆட்டோ வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்ததால் அது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment