FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, January 1, 2025

தாம்பரத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை கொன்றது யார்?



31.12.2024 
சென்னை:
தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்குள்ள குடோன் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, இறந்து கிடந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கை, கால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் ஸ்குவாட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாய் பேச முடியாதவர்

மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது, இறந்து கிடந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும், சூர்யா பிறவிலேயே காது கேட்கும் திறனற்றவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா வீட்டிற்கு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரமா

இதையடுத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூர்யாவை யார் கழுத்தறுத்து கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? ஏதாவது காதல் விவகாரமா போன்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் ஆட்டோ வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்ததால் அது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment