FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, January 4, 2025

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனே வழங்க வலியுறுத்தல்





திருச்சி 30.12.2024

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் துவாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் முல்லைவளவன் தலைமை வகித்தார். இதில், மாதாந்திர பயணப்படி விண்ணப்பித்து பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நீண்டநாள்களாகக் காத்திருக்கின்றனர்.

இவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment