FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, January 4, 2025

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனே வழங்க வலியுறுத்தல்





திருச்சி 30.12.2024

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் துவாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் முல்லைவளவன் தலைமை வகித்தார். இதில், மாதாந்திர பயணப்படி விண்ணப்பித்து பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நீண்டநாள்களாகக் காத்திருக்கின்றனர்.

இவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment