FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 4, 2025

பூட்டேற்றி: சடலமான நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி


கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் குலசேகரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தற்போது பூட்டேற்றி அருகே காந்தி நகர் காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது மனைவியே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மீண்டும் அவர்களுடன் செல்லாமல் பூட்டேற்றி பகுதிக்கு வந்து தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று(ஜன.2) காலை காந்தி நகர் காலனி பகுதியில் ஒரு கடையின் முன்பக்கம் அருணாச்சலம் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அருணாச்சலம் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் உடல் நலக் குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment