FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, January 4, 2025

பூட்டேற்றி: சடலமான நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி


கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் குலசேகரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தற்போது பூட்டேற்றி அருகே காந்தி நகர் காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது மனைவியே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மீண்டும் அவர்களுடன் செல்லாமல் பூட்டேற்றி பகுதிக்கு வந்து தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று(ஜன.2) காலை காந்தி நகர் காலனி பகுதியில் ஒரு கடையின் முன்பக்கம் அருணாச்சலம் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அருணாச்சலம் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் உடல் நலக் குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment