FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 2, 2025

தாம்பரம் மாற்றுத்திறனாளி படுகொலை வழக்கு - கைதானவர்கள் போலீஸிடம் சொன்ன காரணம் என்ன?


கைது செய்யப்பட்ட நபர்கள் 

02.01.2025
சேலையூர் அருகே கை, கால்களைக் கட்டி, கழுத்தறுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சூர்யாவின் கொலை வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: தாம்பரம் அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை சேலையூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், இந்த கொலையில் வேறு எதாவது உள்நோக்கம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு மப்பேடு புத்தூர் கிராமம் அருகே அலங்கார் கட்டட அடுக்குமாடி குடோன் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, அந்த குடோனின் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை:

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த ஆண் நபர் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கட்டப்பட்டு, அவர் மேல் கூழாங்கல், கிரஷர் மணல் போடப்பட்டிருந்ததும், மேலும் இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு, கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளதும் தெரியவந்தது.
அதனையடுத்து, சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள போலீஸ் மோப்பநாய் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது.

கொலை வழக்கில் மூவர் கைது:

பின்னர், தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குநர் பவானி, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இறந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியைச் சூர்யா (21) எனவும், எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்தவர் இவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலையூர் அகரம் தென் பகுதியைச் சேர்ந்த சபரி கணேசன்(25), சேலையூரைச் சேர்ந்த ஐயப்பன்(26), குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த விஜய பிரதாப்(23) ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்துள்ளனர்.

கொலைக்கு என்ன காரணம்?

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா மதுபோதையில் அவர்களிடம் தகராறு செய்ததாகவும், அதனால் சூர்யாவை அவர்கள் மூவரும் ஆட்டோவில் குரோம்பேட்டையில் உள்ள விஜய் பிரதாப் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பின்னர் மப்பேடு பகுதியில் சாலையோரம் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூன்று பேரிடமும் இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment