FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, January 2, 2025

தாம்பரம் மாற்றுத்திறனாளி படுகொலை வழக்கு - கைதானவர்கள் போலீஸிடம் சொன்ன காரணம் என்ன?


கைது செய்யப்பட்ட நபர்கள் 

02.01.2025
சேலையூர் அருகே கை, கால்களைக் கட்டி, கழுத்தறுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சூர்யாவின் கொலை வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: தாம்பரம் அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை சேலையூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், இந்த கொலையில் வேறு எதாவது உள்நோக்கம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு மப்பேடு புத்தூர் கிராமம் அருகே அலங்கார் கட்டட அடுக்குமாடி குடோன் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, அந்த குடோனின் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை:

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த ஆண் நபர் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கட்டப்பட்டு, அவர் மேல் கூழாங்கல், கிரஷர் மணல் போடப்பட்டிருந்ததும், மேலும் இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு, கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளதும் தெரியவந்தது.
அதனையடுத்து, சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள போலீஸ் மோப்பநாய் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது.

கொலை வழக்கில் மூவர் கைது:

பின்னர், தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குநர் பவானி, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இறந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியைச் சூர்யா (21) எனவும், எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்தவர் இவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலையூர் அகரம் தென் பகுதியைச் சேர்ந்த சபரி கணேசன்(25), சேலையூரைச் சேர்ந்த ஐயப்பன்(26), குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த விஜய பிரதாப்(23) ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்துள்ளனர்.

கொலைக்கு என்ன காரணம்?

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா மதுபோதையில் அவர்களிடம் தகராறு செய்ததாகவும், அதனால் சூர்யாவை அவர்கள் மூவரும் ஆட்டோவில் குரோம்பேட்டையில் உள்ள விஜய் பிரதாப் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பின்னர் மப்பேடு பகுதியில் சாலையோரம் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூன்று பேரிடமும் இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment