FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 2, 2025

தாம்பரம் மாற்றுத்திறனாளி படுகொலை வழக்கு - கைதானவர்கள் போலீஸிடம் சொன்ன காரணம் என்ன?


கைது செய்யப்பட்ட நபர்கள் 

02.01.2025
சேலையூர் அருகே கை, கால்களைக் கட்டி, கழுத்தறுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சூர்யாவின் கொலை வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: தாம்பரம் அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை சேலையூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், இந்த கொலையில் வேறு எதாவது உள்நோக்கம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு மப்பேடு புத்தூர் கிராமம் அருகே அலங்கார் கட்டட அடுக்குமாடி குடோன் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, அந்த குடோனின் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை:

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த ஆண் நபர் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கட்டப்பட்டு, அவர் மேல் கூழாங்கல், கிரஷர் மணல் போடப்பட்டிருந்ததும், மேலும் இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு, கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளதும் தெரியவந்தது.
அதனையடுத்து, சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள போலீஸ் மோப்பநாய் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது.

கொலை வழக்கில் மூவர் கைது:

பின்னர், தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குநர் பவானி, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இறந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியைச் சூர்யா (21) எனவும், எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்தவர் இவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலையூர் அகரம் தென் பகுதியைச் சேர்ந்த சபரி கணேசன்(25), சேலையூரைச் சேர்ந்த ஐயப்பன்(26), குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த விஜய பிரதாப்(23) ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்துள்ளனர்.

கொலைக்கு என்ன காரணம்?

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா மதுபோதையில் அவர்களிடம் தகராறு செய்ததாகவும், அதனால் சூர்யாவை அவர்கள் மூவரும் ஆட்டோவில் குரோம்பேட்டையில் உள்ள விஜய் பிரதாப் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பின்னர் மப்பேடு பகுதியில் சாலையோரம் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூன்று பேரிடமும் இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment