FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 14, 2025

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும்: பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேச்சு



10.01.2025 சென்னை: அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், என்று பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன் (திமுக) பேசியதாவது: காலம் காலமாக 15, 16, 20 ஆண்டுகளாக நம் மாற்றுத்திறனாளிகள் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒப்பந்த அடிப்படையில் உள்ளார்கள்.

அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை வலுவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக தேர்வாணையத்தின் மூலமாக அவர்களை பணியில் எடுக்கவேண்டுமென்ற ஒரு அடிப்படை முறை இருக்கிறது. தேர்வாணையத்தின் மூலம் எளிதாக அந்த மாற்றத் திறனாளிகளை நிரந்தர வேலைகளில் சேர்ப்பதற்கான வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முதல்வர் பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment