FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 14, 2025

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும்: பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேச்சு



10.01.2025 சென்னை: அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், என்று பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன் (திமுக) பேசியதாவது: காலம் காலமாக 15, 16, 20 ஆண்டுகளாக நம் மாற்றுத்திறனாளிகள் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒப்பந்த அடிப்படையில் உள்ளார்கள்.

அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை வலுவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக தேர்வாணையத்தின் மூலமாக அவர்களை பணியில் எடுக்கவேண்டுமென்ற ஒரு அடிப்படை முறை இருக்கிறது. தேர்வாணையத்தின் மூலம் எளிதாக அந்த மாற்றத் திறனாளிகளை நிரந்தர வேலைகளில் சேர்ப்பதற்கான வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முதல்வர் பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment