FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 14, 2025

தேசிய ‘ஸ்ட்ரென்த் லிப்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டி! தங்கம் வென்ற தூத்துக்குடி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி!


12.01.2025
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டியில் பிறவியில் வாய் பேச முடியாத தூத்துக்குடி மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெண்கலம் வென்று சாதனை தூத்துக்குடி வந்த அவருக்கு சக வீரர்கள் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய அளவில் ஹரியானா ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், உடல் வலிமையை நிரூபிக்கும் 34வது தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் கடந்த 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.

போட்டிகள், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி:

இதில், தமிழ்நாடு ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், 32 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அனைத்து போட்டிகளின் முடிவில், தமிழக வீரர் வீராங்கனையர்கள் 13 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதில், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாற்றுத்திறனாளி (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) மாணவி பிரித்தி சிவ பிச்சம்மாள் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என மூன்று சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி வருகை தந்த அவருக்கு சக வீரர்கள், உடற் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவரை வாழ்த்தி கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து அவரது பயிற்றுனர் வைரவேல், பிரித்தி சிவபிச்சம்மாள் ஸ்பெஷல் சைல்ட் (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) எனக் கூறிய அவர், ஏற்கனவே தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், குறைந்த காலத்தில் மீண்டும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். பயின்றார்.

பவர் லிப்டிங் போட்டியில் சவுத் இந்தியா, கோவாவில் நடந்த தேசிய போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற நிலையில், தேசிய அளவில் ஹரியானாவில் ஜனவரி 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற ஸ்ட்ரென்ட் லிப்ட்' போட்டியில் ஜூனியர் சீனியர் பிரிவில் பங்கு பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களும் பெஞ்ச் பிரஸ் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் 3 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் வெற்றி பெற்றதால் அடுத்து இலங்கையில் உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் பல்வேறு பவர் லிப்டிங் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார் என்றார். ஆணுக்கு நிகராக இந்த வாய் பேச முடியாத பிரித்தி சிவ பிச்சம்மாள் திகழ்வதாக குறிப்பிட்டார்.

மே மாதம் மகாராஷ்டிராவில் நடைபெறும் நேஷனல் பவர் லிப்டிங் போட்டியிலும் இவர் தேர்வாகியுள்ளார். அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெறும் பெடரேசன் கேம்ஸ் போட்டியிலும், அடுத்து 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள ஏசியன் கேம்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment