FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 14, 2025

தேசிய ‘ஸ்ட்ரென்த் லிப்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டி! தங்கம் வென்ற தூத்துக்குடி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி!


12.01.2025
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டியில் பிறவியில் வாய் பேச முடியாத தூத்துக்குடி மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெண்கலம் வென்று சாதனை தூத்துக்குடி வந்த அவருக்கு சக வீரர்கள் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய அளவில் ஹரியானா ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், உடல் வலிமையை நிரூபிக்கும் 34வது தேசிய 'ஸ்ட்ரென்ட் லிப்ட்' சாம்பியன்ஷிப் போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் கடந்த 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.

போட்டிகள், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி:

இதில், தமிழ்நாடு ஸ்ட்ரென்ட் லிப்ட் சங்கம் சார்பில், 32 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அனைத்து போட்டிகளின் முடிவில், தமிழக வீரர் வீராங்கனையர்கள் 13 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதில், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாற்றுத்திறனாளி (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) மாணவி பிரித்தி சிவ பிச்சம்மாள் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என மூன்று சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி வருகை தந்த அவருக்கு சக வீரர்கள், உடற் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவரை வாழ்த்தி கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து அவரது பயிற்றுனர் வைரவேல், பிரித்தி சிவபிச்சம்மாள் ஸ்பெஷல் சைல்ட் (பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்) எனக் கூறிய அவர், ஏற்கனவே தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், குறைந்த காலத்தில் மீண்டும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். பயின்றார்.

பவர் லிப்டிங் போட்டியில் சவுத் இந்தியா, கோவாவில் நடந்த தேசிய போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற நிலையில், தேசிய அளவில் ஹரியானாவில் ஜனவரி 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற ஸ்ட்ரென்ட் லிப்ட்' போட்டியில் ஜூனியர் சீனியர் பிரிவில் பங்கு பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களும் பெஞ்ச் பிரஸ் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் 3 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் வெற்றி பெற்றதால் அடுத்து இலங்கையில் உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் பல்வேறு பவர் லிப்டிங் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார் என்றார். ஆணுக்கு நிகராக இந்த வாய் பேச முடியாத பிரித்தி சிவ பிச்சம்மாள் திகழ்வதாக குறிப்பிட்டார்.

மே மாதம் மகாராஷ்டிராவில் நடைபெறும் நேஷனல் பவர் லிப்டிங் போட்டியிலும் இவர் தேர்வாகியுள்ளார். அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெறும் பெடரேசன் கேம்ஸ் போட்டியிலும், அடுத்து 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள ஏசியன் கேம்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment