FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 1, 2025

தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது: சுகாதாரத் துறை தகவல்



29.12.2024 சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது. பொதுவாக 1000 குழந்தைகளில் 7.5 குழந்தைகளுக்கு பிறவியில் இருந்தே காது கேட்காத நிலை உள்ளது. இந்த குறையை காக்லியர் கருவி (cochlear implant) மூலம் தீர்க்க முடியும். இந்த காக்லியர் கருவி என்பது காதுகள் அருகில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வைக்கப்படும் ஒரு சிறிய மின்னணு சாதனமாகும்.

இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்குவதற்கும், கேட்பதற்கும் காக்லியர் நரம்பைத் தூண்டும். காக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் கேக்கும் திறன் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கும் 6.5 லட்சம் வரை செலவாகும் நிலையில் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிறப்பு முதல் காது கேட்காத குழந்தைகள் உலகத்துனுடைய சத்தங்களை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்காக தமிழ்நாட்டில் காக்கிலியர் கருவி அந்த குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 3.1 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்துள்ளது.

இவர்களை பரிசோதனை செய்ததில் 406 குழந்தைகளுக்கு காது கேட்காத நிலை இருந்துள்ளது. தற்போது 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 170 குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மீதுமுள்ள 31 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment