FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 1, 2025

தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது: சுகாதாரத் துறை தகவல்



29.12.2024 சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது. பொதுவாக 1000 குழந்தைகளில் 7.5 குழந்தைகளுக்கு பிறவியில் இருந்தே காது கேட்காத நிலை உள்ளது. இந்த குறையை காக்லியர் கருவி (cochlear implant) மூலம் தீர்க்க முடியும். இந்த காக்லியர் கருவி என்பது காதுகள் அருகில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வைக்கப்படும் ஒரு சிறிய மின்னணு சாதனமாகும்.

இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்குவதற்கும், கேட்பதற்கும் காக்லியர் நரம்பைத் தூண்டும். காக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் கேக்கும் திறன் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கும் 6.5 லட்சம் வரை செலவாகும் நிலையில் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிறப்பு முதல் காது கேட்காத குழந்தைகள் உலகத்துனுடைய சத்தங்களை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்காக தமிழ்நாட்டில் காக்கிலியர் கருவி அந்த குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 3.1 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்துள்ளது.

இவர்களை பரிசோதனை செய்ததில் 406 குழந்தைகளுக்கு காது கேட்காத நிலை இருந்துள்ளது. தற்போது 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 170 குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மீதுமுள்ள 31 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment