FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, January 1, 2025

தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது: சுகாதாரத் துறை தகவல்



29.12.2024 சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது. பொதுவாக 1000 குழந்தைகளில் 7.5 குழந்தைகளுக்கு பிறவியில் இருந்தே காது கேட்காத நிலை உள்ளது. இந்த குறையை காக்லியர் கருவி (cochlear implant) மூலம் தீர்க்க முடியும். இந்த காக்லியர் கருவி என்பது காதுகள் அருகில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வைக்கப்படும் ஒரு சிறிய மின்னணு சாதனமாகும்.

இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்குவதற்கும், கேட்பதற்கும் காக்லியர் நரம்பைத் தூண்டும். காக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் கேக்கும் திறன் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கும் 6.5 லட்சம் வரை செலவாகும் நிலையில் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிறப்பு முதல் காது கேட்காத குழந்தைகள் உலகத்துனுடைய சத்தங்களை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்காக தமிழ்நாட்டில் காக்கிலியர் கருவி அந்த குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 3.1 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்துள்ளது.

இவர்களை பரிசோதனை செய்ததில் 406 குழந்தைகளுக்கு காது கேட்காத நிலை இருந்துள்ளது. தற்போது 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 170 குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மீதுமுள்ள 31 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment