FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, February 12, 2014

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

11.02.2014 திருச்சி,
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பெண் கற்பழிப்பு
திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் திலகவதி (வயது24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதே பகுதியை சேர்ந்தவர் பட்டகுமார் என்கிற குமார் (43) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10–9–2012 அன்று வீட்டில் தனியாக இருந்த குமார், திலகவதியை கற்பழித்தார். நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

10 ஆண்டு சிறை
இதுபற்றி திலகவதியின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் குமாரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment