FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 12, 2014

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

11.02.2014 திருச்சி,
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பெண் கற்பழிப்பு
திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் திலகவதி (வயது24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதே பகுதியை சேர்ந்தவர் பட்டகுமார் என்கிற குமார் (43) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10–9–2012 அன்று வீட்டில் தனியாக இருந்த குமார், திலகவதியை கற்பழித்தார். நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

10 ஆண்டு சிறை
இதுபற்றி திலகவதியின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் குமாரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment