FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 12, 2014

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

11.02.2014 திருச்சி,
மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பெண் கற்பழிப்பு
திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் திலகவதி (வயது24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதே பகுதியை சேர்ந்தவர் பட்டகுமார் என்கிற குமார் (43) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10–9–2012 அன்று வீட்டில் தனியாக இருந்த குமார், திலகவதியை கற்பழித்தார். நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

10 ஆண்டு சிறை
இதுபற்றி திலகவதியின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் குமாரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment