FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 3, 2014

மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று

03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
  • அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
  • ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
இதுபோல் மத்திய அரசு சாரம் அற்ற ஐ.நா. விதிகளுக்கு மாறாக ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஊனப்படுத்தி உள்ளதை எதிர்த்தும் – ஐ.நா. விதிகள் படி சட்டம் இயற்ற கோரியும் நாடு முழுவதும் இன்று போராட்ட இயக்கங்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியிலும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment