FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 3, 2014

மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று

03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
  • அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
  • ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
இதுபோல் மத்திய அரசு சாரம் அற்ற ஐ.நா. விதிகளுக்கு மாறாக ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஊனப்படுத்தி உள்ளதை எதிர்த்தும் – ஐ.நா. விதிகள் படி சட்டம் இயற்ற கோரியும் நாடு முழுவதும் இன்று போராட்ட இயக்கங்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியிலும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment