FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, February 3, 2014

மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று

03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
  • அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
  • ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
இதுபோல் மத்திய அரசு சாரம் அற்ற ஐ.நா. விதிகளுக்கு மாறாக ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஊனப்படுத்தி உள்ளதை எதிர்த்தும் – ஐ.நா. விதிகள் படி சட்டம் இயற்ற கோரியும் நாடு முழுவதும் இன்று போராட்ட இயக்கங்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியிலும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment