FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, February 3, 2014

மத்திய அரசே! ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை வலுவற்ற சட்டமாக்கி ஊனப்படுத்தாதே!! ஐ.நா விதிகளின் படி முழுமையான சட்டம் இயற்று

03.02.2014, திருச்சி:
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசே வலுயுறுத்தியதன் படியும், 2007ம் ஆண்டு ஐ.நா. மாநாட்டு விதிகளின்படியும் இந்தியா ஏற்றுக்கொண்டபடி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தொடர்ந்த போராட்டங்களுக்கு பிறகு 2012 செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்து இத்துறை மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அறிந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் முன் வைத்து நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் இதில் ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் பல சரத்துகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டத்தின் சாரம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஊனமுற்றோர் வரையறை செய்ய புதிய அணுகுமுறை (விஞ்ஞான) இல்லை. இது ஐ.நா. விதிக்கு மாறானது.
  • அதிக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெண்கள் சரத்து நீக்கப்பட்டுள்ளது.
  • ஊனமுற்றவர்களுக்கான பணிகளை கண்டறிவது அங்கீகரிப்பது, பணி வழங்குவது இணைப்பு இல்லை.
இதுபோல் மத்திய அரசு சாரம் அற்ற ஐ.நா. விதிகளுக்கு மாறாக ஊனமுற்றோர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஊனப்படுத்தி உள்ளதை எதிர்த்தும் – ஐ.நா. விதிகள் படி சட்டம் இயற்ற கோரியும் நாடு முழுவதும் இன்று போராட்ட இயக்கங்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியிலும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை” சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருச்சியில் 03.02.2014 அன்று காலை ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தலைவர் R.ரவி, தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் V.V.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்க தலைவர் N.ரமேஷ்பாபு, செயலாளர் MM.சிவக்குமார், பொருளாளர் C.புஷ்பநாதன் மற்றும் சரவணன், அப்துல் சலாம், G.நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள், S.ஞானசேகர், S.கோவிந்தராஜன், ஜெயராமன், சித்ரா, செல்லப்பெருமாள், ஸ்ரீதர், சார்லஸ் உள்ளிட்டு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காதுகேளாதோருக்கான செய்கைமொழி (Sign Language) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment