FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, February 8, 2014

புதிய மசோதா தாக்கல் வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

08.02.2014, புதுடெல்லி:
தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களால் மாநிலங்களவையில் நேற்று நடந்த அமளிக்கு இடையே, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை சமூக நீதித்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதில், பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாற்று திறனாளிகளுக்கு 7 பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த புதிய மசோதாவின் மூலம் 19 பிரிவுகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதை மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி முடிவு செய்வார் என்று அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment