FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 8, 2014

புதிய மசோதா தாக்கல் வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

08.02.2014, புதுடெல்லி:
தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களால் மாநிலங்களவையில் நேற்று நடந்த அமளிக்கு இடையே, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை சமூக நீதித்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதில், பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாற்று திறனாளிகளுக்கு 7 பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த புதிய மசோதாவின் மூலம் 19 பிரிவுகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதை மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி முடிவு செய்வார் என்று அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment