FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, February 8, 2014

புதிய மசோதா தாக்கல் வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

08.02.2014, புதுடெல்லி:
தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களால் மாநிலங்களவையில் நேற்று நடந்த அமளிக்கு இடையே, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை சமூக நீதித்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதில், பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாற்று திறனாளிகளுக்கு 7 பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த புதிய மசோதாவின் மூலம் 19 பிரிவுகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதை மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி முடிவு செய்வார் என்று அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment