FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, February 8, 2014

புதிய மசோதா தாக்கல் வேலைவாய்ப்பு, உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு

08.02.2014, புதுடெல்லி:
தெலங்கானா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களால் மாநிலங்களவையில் நேற்று நடந்த அமளிக்கு இடையே, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவை சமூக நீதித்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதில், பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், மாற்று திறனாளிகளுக்கு 7 பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த புதிய மசோதாவின் மூலம் 19 பிரிவுகளில் அவர்களுக்கு சலுகைகள் வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதை மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி முடிவு செய்வார் என்று அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment