FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, February 5, 2014

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014, ஊட்டி,

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் மாற்றுத்திற னாளிகள் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமை களுக்கான சங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருதி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து அரசு டாக்டர் களிடமும் அடை யாள அட்டை பெற அனுமதி அளிக்க வேண்டும்.

மிகவும் இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அடையாள அட்டை களை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய உதவி தொகையை உடனடி யாக கிடைக்க செய்ய வேண் டும். பொது இடங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என் பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment