FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 5, 2014

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014, ஊட்டி,

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் மாற்றுத்திற னாளிகள் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமை களுக்கான சங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருதி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து அரசு டாக்டர் களிடமும் அடை யாள அட்டை பெற அனுமதி அளிக்க வேண்டும்.

மிகவும் இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அடையாள அட்டை களை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய உதவி தொகையை உடனடி யாக கிடைக்க செய்ய வேண் டும். பொது இடங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என் பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment