FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 4, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்கவேண்டும்

03.02.2014 நெல்லை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கங்காதரன் தலைமைதாங்கினார். காதுகேளாதோர் சங்க நிர்வாகி அரசு முத்து முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் நெல்லை மாவட்ட மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ரூ.1000 உதவித் தொகை
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகை கடந்த சில மாதங்களாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை நிலுவையுடன் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment