FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, February 4, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்கவேண்டும்

03.02.2014 நெல்லை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கங்காதரன் தலைமைதாங்கினார். காதுகேளாதோர் சங்க நிர்வாகி அரசு முத்து முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் நெல்லை மாவட்ட மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ரூ.1000 உதவித் தொகை
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகை கடந்த சில மாதங்களாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை நிலுவையுடன் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment