FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 4, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்கவேண்டும்

03.02.2014 நெல்லை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கங்காதரன் தலைமைதாங்கினார். காதுகேளாதோர் சங்க நிர்வாகி அரசு முத்து முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் நெல்லை மாவட்ட மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ரூ.1000 உதவித் தொகை
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகை கடந்த சில மாதங்களாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை நிலுவையுடன் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment