FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 4, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்கவேண்டும்

03.02.2014 நெல்லை,
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் கங்காதரன் தலைமைதாங்கினார். காதுகேளாதோர் சங்க நிர்வாகி அரசு முத்து முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் நெல்லை மாவட்ட மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ரூ.1000 உதவித் தொகை
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகை கடந்த சில மாதங்களாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை நிலுவையுடன் உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற டீன் டாக்டர் ராமகுரு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment