FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 4, 2014

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014 திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காளியப் பன், துணைச்செயலாளர் ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். ஊனமுற்றோருக்கு பலனளிக்கும் ஷரத்துத்துக் களை நீக்க கூடாது.

இவற்றை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பைசாஅகமது நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment