FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 4, 2014

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014 திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காளியப் பன், துணைச்செயலாளர் ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். ஊனமுற்றோருக்கு பலனளிக்கும் ஷரத்துத்துக் களை நீக்க கூடாது.

இவற்றை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பைசாஅகமது நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment