FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, February 19, 2014

விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை

18.02.2014 மதுரை, :
மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி 3 நாள் மதுரையில் நடந்தது. கைகால் பாதித்தவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூர் வீரர் முரளிதாஸ் முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் திருவண்ணாமலை வீரர் சிவகிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் தஞ்சை மணிவேல், கூடைப்பந்து போட்டியில் மதுரை அந்தோணி மற்றும் வீல்சேர் போட்டியில் நெல்லை கோவிந்தன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சை கிரிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் கீர்த்திகா, நீளம் தாண்டுதலில் தஞ்சை வீரலட்சுமி, கூடைப்பந்து போட்டியில் நாமக்கல் பாவை, வீல்சேர் பிரிவில் நெல்லை சுப்புலட்சுமி முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment