FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, February 19, 2014

விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை

18.02.2014 மதுரை, :
மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி 3 நாள் மதுரையில் நடந்தது. கைகால் பாதித்தவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூர் வீரர் முரளிதாஸ் முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் திருவண்ணாமலை வீரர் சிவகிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் தஞ்சை மணிவேல், கூடைப்பந்து போட்டியில் மதுரை அந்தோணி மற்றும் வீல்சேர் போட்டியில் நெல்லை கோவிந்தன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சை கிரிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் கீர்த்திகா, நீளம் தாண்டுதலில் தஞ்சை வீரலட்சுமி, கூடைப்பந்து போட்டியில் நாமக்கல் பாவை, வீல்சேர் பிரிவில் நெல்லை சுப்புலட்சுமி முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment