FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, February 19, 2014

விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை

18.02.2014 மதுரை, :
மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி 3 நாள் மதுரையில் நடந்தது. கைகால் பாதித்தவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூர் வீரர் முரளிதாஸ் முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் திருவண்ணாமலை வீரர் சிவகிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் தஞ்சை மணிவேல், கூடைப்பந்து போட்டியில் மதுரை அந்தோணி மற்றும் வீல்சேர் போட்டியில் நெல்லை கோவிந்தன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சை கிரிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் கீர்த்திகா, நீளம் தாண்டுதலில் தஞ்சை வீரலட்சுமி, கூடைப்பந்து போட்டியில் நாமக்கல் பாவை, வீல்சேர் பிரிவில் நெல்லை சுப்புலட்சுமி முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment