FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் சலுகை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது

07.02.2014, சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை, இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வினை மனவளர்ச்சி குன்றிய, டிஸ்லெக்சியா குறைபாடுகள் உள்ள மாணவ–மாணவிகளுக்கு தேர்வு எழுத சலுகைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத்தில் வருகிற 3.3.2014 முதல் 25.3.2014 முடிய மேல் நிலைத்தேர்வுகளும், அரசு பொதுதேர்வுகளும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுதேர்வுகள் 26.3.2014 முதல் 9.4.2014 முடியவும் நடைபெற உள்ளது.

மேல்நிலை தேர்வினை 90 தேர்வு மையங்களில் 38 ஆயிரத்து 322 மாணவ, மாணவியர்களும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வினை 133 மையங்களில் 48 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் கண்பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றவர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு போன்ற குறைபாடுகளுடைய மாணவ, மாணவியர்களுக்கு தேர்வின் போது வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்), இணை இயக்குநர் (மருத்துவம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களை இந்த குழு தேர்ந்தெடுத்து, தேர்வுக்கு அனுப்பும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment