FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் சலுகை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது

07.02.2014, சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை, இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வினை மனவளர்ச்சி குன்றிய, டிஸ்லெக்சியா குறைபாடுகள் உள்ள மாணவ–மாணவிகளுக்கு தேர்வு எழுத சலுகைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத்தில் வருகிற 3.3.2014 முதல் 25.3.2014 முடிய மேல் நிலைத்தேர்வுகளும், அரசு பொதுதேர்வுகளும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுதேர்வுகள் 26.3.2014 முதல் 9.4.2014 முடியவும் நடைபெற உள்ளது.

மேல்நிலை தேர்வினை 90 தேர்வு மையங்களில் 38 ஆயிரத்து 322 மாணவ, மாணவியர்களும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வினை 133 மையங்களில் 48 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் கண்பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றவர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு போன்ற குறைபாடுகளுடைய மாணவ, மாணவியர்களுக்கு தேர்வின் போது வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்), இணை இயக்குநர் (மருத்துவம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களை இந்த குழு தேர்ந்தெடுத்து, தேர்வுக்கு அனுப்பும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment