FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் சலுகை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது

07.02.2014, சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை, இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வினை மனவளர்ச்சி குன்றிய, டிஸ்லெக்சியா குறைபாடுகள் உள்ள மாணவ–மாணவிகளுக்கு தேர்வு எழுத சலுகைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத்தில் வருகிற 3.3.2014 முதல் 25.3.2014 முடிய மேல் நிலைத்தேர்வுகளும், அரசு பொதுதேர்வுகளும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுதேர்வுகள் 26.3.2014 முதல் 9.4.2014 முடியவும் நடைபெற உள்ளது.

மேல்நிலை தேர்வினை 90 தேர்வு மையங்களில் 38 ஆயிரத்து 322 மாணவ, மாணவியர்களும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வினை 133 மையங்களில் 48 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் கண்பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றவர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு போன்ற குறைபாடுகளுடைய மாணவ, மாணவியர்களுக்கு தேர்வின் போது வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்), இணை இயக்குநர் (மருத்துவம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களை இந்த குழு தேர்ந்தெடுத்து, தேர்வுக்கு அனுப்பும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment