FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் சலுகை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது

07.02.2014, சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை, இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வினை மனவளர்ச்சி குன்றிய, டிஸ்லெக்சியா குறைபாடுகள் உள்ள மாணவ–மாணவிகளுக்கு தேர்வு எழுத சலுகைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத்தில் வருகிற 3.3.2014 முதல் 25.3.2014 முடிய மேல் நிலைத்தேர்வுகளும், அரசு பொதுதேர்வுகளும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுதேர்வுகள் 26.3.2014 முதல் 9.4.2014 முடியவும் நடைபெற உள்ளது.

மேல்நிலை தேர்வினை 90 தேர்வு மையங்களில் 38 ஆயிரத்து 322 மாணவ, மாணவியர்களும், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வினை 133 மையங்களில் 48 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் கண்பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்றவர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் குன்றியவர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு போன்ற குறைபாடுகளுடைய மாணவ, மாணவியர்களுக்கு தேர்வின் போது வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்), இணை இயக்குநர் (மருத்துவம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களை இந்த குழு தேர்ந்தெடுத்து, தேர்வுக்கு அனுப்பும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment