FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 3, 2014

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

03.02.2014, சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வலியுறுத்தியும், புதிய மசோதாவை திருத்தங்களுடண் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கோரியும், 40 சதவீத ஊனத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உதவித்தொகை பெற உள்ள கடும் விதிமுறைகளை தளர்த்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜே.ராஜா, கே.ராமநாதன், கே.பாக்கியராஜ், ஆர்.முருகப்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆர்.எழுமலை, கே.செந்தில், வி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.உதயக்குமார், மாநிலக்குழுவைச் சேர்ந்த ஆர்.இளங்கோவன், ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலைவர் டி.ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thanks to Dinamani.

No comments:

Post a Comment