FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 3, 2014

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

03.02.2014, சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வலியுறுத்தியும், புதிய மசோதாவை திருத்தங்களுடண் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கோரியும், 40 சதவீத ஊனத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உதவித்தொகை பெற உள்ள கடும் விதிமுறைகளை தளர்த்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜே.ராஜா, கே.ராமநாதன், கே.பாக்கியராஜ், ஆர்.முருகப்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆர்.எழுமலை, கே.செந்தில், வி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.உதயக்குமார், மாநிலக்குழுவைச் சேர்ந்த ஆர்.இளங்கோவன், ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலைவர் டி.ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thanks to Dinamani.

No comments:

Post a Comment