FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 3, 2014

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

03.02.2014, சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வலியுறுத்தியும், புதிய மசோதாவை திருத்தங்களுடண் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கோரியும், 40 சதவீத ஊனத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உதவித்தொகை பெற உள்ள கடும் விதிமுறைகளை தளர்த்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜே.ராஜா, கே.ராமநாதன், கே.பாக்கியராஜ், ஆர்.முருகப்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆர்.எழுமலை, கே.செந்தில், வி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.உதயக்குமார், மாநிலக்குழுவைச் சேர்ந்த ஆர்.இளங்கோவன், ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலைவர் டி.ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thanks to Dinamani.

No comments:

Post a Comment