FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, February 7, 2014

குப்பை பொறுக்குகிறார்... பிளாட்பாரத்தில் தூங்குகிறார்: ஆசிரியர் கனவோடு படித்து சாதிக்கும் மாற்றுதிறனாளி

உடலில் ஊனம் இருக்கலாம். உள்ளம் ஊனப்படாமல் இருந்தால் வானம்கூட வசப்படும் என்று சாதித்து காட்டிய மாற்றுதிறனாளிகள் பலர் இருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் எப்போதும் மாற்றி யோசிக்கக் கூடியவர்கள்தான். எல்லோரையும் போல் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருக்கும். அதே போல்தான் 33 வயது இளைஞர் ஒருவர் ஊனத்தை பெரிது படுத்தாமல், குடும்பத்தில் படிக்க வைக்க வசதியில்லாத சூழ்நிலையிலும் தான் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாளையம் கவுன்டர் குஞ்சாளம்மாள் என்பவரது மகன் பார்த்த சாரதி (33). இவர் பிறந்து 2 வயதிலேயே தந்தை பாளையம் கவுன்டர் இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்தசாரதி 12-ம்வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இளங்கலை பட்டம் பயின்றார். மேலும் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் அதிலும் குறிப்பாக ஆசிரியராக வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம்... கனவு எல்லாம்...

பொருளாதாரம் பொருளாதார வசதி கை கொடுக்காவிட்டாலும் படித்தே தீர வேண்டும் என்ற அவரின் தணியாத தாகம் இப்போது அவரை திருவள்ளூர் அடுத்த திருவூரில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என்ன தான் அரசு பள்ளியாக இருந்தாலும், அவர் தங்குவதற்கும், உண்பதற்கும், உடுத்துவதற்கும் வசதியில்லை.

அதனால் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத் தில் படுத்து உறங்குவதும், காலையில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று படிப்பதும், மாலை வேளைகளில் குப்பைகளை பொறுக்கி அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டு தன் படிப்பை தொடர்கிறார் இந்த பார்த்தசாரதி. படிக்க வேண்டும், கெளரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு உதவத்தான் யாரும் இல்லை. இவரைப் போல சகாதேவன் என்ற மாற்றுத்திறனாளியும் முடிவெட்டி சாதிக்கிறார்.

யாரும் உதவாவிட்டாலும் மற்றவர்களிடம் பிச்சை எடுக்காமல் தன்னாலும் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழும் பார்த்தசாரதி, சகாதேவனின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம். உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் ஊனம் இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே சாட்சி.

No comments:

Post a Comment