FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, February 7, 2014

குப்பை பொறுக்குகிறார்... பிளாட்பாரத்தில் தூங்குகிறார்: ஆசிரியர் கனவோடு படித்து சாதிக்கும் மாற்றுதிறனாளி

உடலில் ஊனம் இருக்கலாம். உள்ளம் ஊனப்படாமல் இருந்தால் வானம்கூட வசப்படும் என்று சாதித்து காட்டிய மாற்றுதிறனாளிகள் பலர் இருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் எப்போதும் மாற்றி யோசிக்கக் கூடியவர்கள்தான். எல்லோரையும் போல் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருக்கும். அதே போல்தான் 33 வயது இளைஞர் ஒருவர் ஊனத்தை பெரிது படுத்தாமல், குடும்பத்தில் படிக்க வைக்க வசதியில்லாத சூழ்நிலையிலும் தான் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாளையம் கவுன்டர் குஞ்சாளம்மாள் என்பவரது மகன் பார்த்த சாரதி (33). இவர் பிறந்து 2 வயதிலேயே தந்தை பாளையம் கவுன்டர் இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்தசாரதி 12-ம்வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார். தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இளங்கலை பட்டம் பயின்றார். மேலும் படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் அதிலும் குறிப்பாக ஆசிரியராக வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம்... கனவு எல்லாம்...

பொருளாதாரம் பொருளாதார வசதி கை கொடுக்காவிட்டாலும் படித்தே தீர வேண்டும் என்ற அவரின் தணியாத தாகம் இப்போது அவரை திருவள்ளூர் அடுத்த திருவூரில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். என்ன தான் அரசு பள்ளியாக இருந்தாலும், அவர் தங்குவதற்கும், உண்பதற்கும், உடுத்துவதற்கும் வசதியில்லை.

அதனால் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத் தில் படுத்து உறங்குவதும், காலையில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று படிப்பதும், மாலை வேளைகளில் குப்பைகளை பொறுக்கி அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டுக் கொண்டு தன் படிப்பை தொடர்கிறார் இந்த பார்த்தசாரதி. படிக்க வேண்டும், கெளரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு உதவத்தான் யாரும் இல்லை. இவரைப் போல சகாதேவன் என்ற மாற்றுத்திறனாளியும் முடிவெட்டி சாதிக்கிறார்.

யாரும் உதவாவிட்டாலும் மற்றவர்களிடம் பிச்சை எடுக்காமல் தன்னாலும் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழும் பார்த்தசாரதி, சகாதேவனின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம். உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் ஊனம் இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே சாட்சி.

No comments:

Post a Comment