FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, February 12, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு திருத்தங்களுடன் புதிய மசோதா

புதுடெல்லி, பிப். 11 - மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திருத்தப் பிரதிகள் இணைக்கப் படவில்லை.

இந்நிலையில் 16 திருத்தங் களுடன் மாற்றுத் திறனாளிகள் மசோதாஅறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பழைய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக அந்த அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக 2011 முதல் மாற்றுத் திறனாளிகள் மசோதா வில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி மாற்றுத்திறனாளிகள் திருத்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் தங்களது முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்று கோரி ஜாவித் அபிதி தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய மசோதாவில் 19 விதமான உடல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Thanks to

No comments:

Post a Comment