FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 25, 2014

தர்மபுரியில் முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகள்

25.02.2014 தர்மபுரி,
முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் நடந்த விழாவில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.

பிறந்தநாள்விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாள ருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை யொட்டி அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார் கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி 4-ரோடு அண்ணா சிலை அருகே இளைஞர் பாசறை சார்பில் நடந்த விழாவிற்கு பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு 66 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து தர்ம புரி அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நடை பெற்றது. முன் னாள் மாவட்ட பால்வளத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங் கினார். விழாவில் அமைச்சர் பி.பழனியப் பன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், பயண பைகள், எழுது பொருட் கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார்.

பொதுக்கூட்டம்

இந்த நிகழ்ச்சிகளில் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகன், ஒன்றிய செயலாளர் கோவிந்த சாமி, பூக்கடை முனுசாமி, முன்னாள் நகரசெயலாளர் ரவி உள் ளிட்ட கட்சி நிர்வாகி கள், சார்பு அமைப்பு பொறுப் பாளர்கள் கலந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் செங்கை அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக வண்ணை நித்ய ராசன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment