FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, February 25, 2014

தர்மபுரியில் முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகள்

25.02.2014 தர்மபுரி,
முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் நடந்த விழாவில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.

பிறந்தநாள்விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாள ருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை யொட்டி அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார் கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி 4-ரோடு அண்ணா சிலை அருகே இளைஞர் பாசறை சார்பில் நடந்த விழாவிற்கு பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு 66 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து தர்ம புரி அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நடை பெற்றது. முன் னாள் மாவட்ட பால்வளத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங் கினார். விழாவில் அமைச்சர் பி.பழனியப் பன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், பயண பைகள், எழுது பொருட் கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார்.

பொதுக்கூட்டம்

இந்த நிகழ்ச்சிகளில் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகன், ஒன்றிய செயலாளர் கோவிந்த சாமி, பூக்கடை முனுசாமி, முன்னாள் நகரசெயலாளர் ரவி உள் ளிட்ட கட்சி நிர்வாகி கள், சார்பு அமைப்பு பொறுப் பாளர்கள் கலந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் செங்கை அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக வண்ணை நித்ய ராசன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment