FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 25, 2014

தர்மபுரியில் முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகள்

25.02.2014 தர்மபுரி,
முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் நடந்த விழாவில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நலஉதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.

பிறந்தநாள்விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாள ருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை யொட்டி அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார் கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி 4-ரோடு அண்ணா சிலை அருகே இளைஞர் பாசறை சார்பில் நடந்த விழாவிற்கு பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு 66 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து தர்ம புரி அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நடை பெற்றது. முன் னாள் மாவட்ட பால்வளத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங் கினார். விழாவில் அமைச்சர் பி.பழனியப் பன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், பயண பைகள், எழுது பொருட் கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார்.

பொதுக்கூட்டம்

இந்த நிகழ்ச்சிகளில் பாராளு மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.மோகன், ஒன்றிய செயலாளர் கோவிந்த சாமி, பூக்கடை முனுசாமி, முன்னாள் நகரசெயலாளர் ரவி உள் ளிட்ட கட்சி நிர்வாகி கள், சார்பு அமைப்பு பொறுப் பாளர்கள் கலந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் செங்கை அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக வண்ணை நித்ய ராசன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Daily Thanthi.

No comments:

Post a Comment