FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை: கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

ஈரோடு, பிப். 6–

ஈரோடு, திண்டல், செங்கோடம்பாளையம், கொங்கு அறிவாலயம், மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 87ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 6 வயதுக்குட்பட்ட 367 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (ஊரகம்) பகுதியில் திண்டல் கொங்கு அறிவாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒரு வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய 30 குழந்தைகளுக்கும்;

சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு சேரன் மண்டல கிருத்துவ சங்கம், கோயமுத்தூர் தொண்டு நிறுவனம் மூலம் 5 செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு தலா 190 கிராம் வீதம் இணை உணவும், மதிய உணவும் ஈரோடு மற்றும் சென்னிமலை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தேவிகுமாரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு ஊரகம்) லதா, கொங்கு அறிவாலயம் முதல்வர் வெங்கடேஸ்வரி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thanks to Maalai Malar.

No comments:

Post a Comment