FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை: கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

ஈரோடு, பிப். 6–

ஈரோடு, திண்டல், செங்கோடம்பாளையம், கொங்கு அறிவாலயம், மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 87ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 6 வயதுக்குட்பட்ட 367 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (ஊரகம்) பகுதியில் திண்டல் கொங்கு அறிவாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒரு வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய 30 குழந்தைகளுக்கும்;

சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு சேரன் மண்டல கிருத்துவ சங்கம், கோயமுத்தூர் தொண்டு நிறுவனம் மூலம் 5 செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு தலா 190 கிராம் வீதம் இணை உணவும், மதிய உணவும் ஈரோடு மற்றும் சென்னிமலை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தேவிகுமாரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு ஊரகம்) லதா, கொங்கு அறிவாலயம் முதல்வர் வெங்கடேஸ்வரி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thanks to Maalai Malar.

No comments:

Post a Comment