FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை: கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

ஈரோடு, பிப். 6–

ஈரோடு, திண்டல், செங்கோடம்பாளையம், கொங்கு அறிவாலயம், மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 87ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 6 வயதுக்குட்பட்ட 367 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (ஊரகம்) பகுதியில் திண்டல் கொங்கு அறிவாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒரு வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய 30 குழந்தைகளுக்கும்;

சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு சேரன் மண்டல கிருத்துவ சங்கம், கோயமுத்தூர் தொண்டு நிறுவனம் மூலம் 5 செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு தலா 190 கிராம் வீதம் இணை உணவும், மதிய உணவும் ஈரோடு மற்றும் சென்னிமலை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தேவிகுமாரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு ஊரகம்) லதா, கொங்கு அறிவாலயம் முதல்வர் வெங்கடேஸ்வரி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thanks to Maalai Malar.

No comments:

Post a Comment