FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, February 7, 2014

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை: கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

ஈரோடு, பிப். 6–

ஈரோடு, திண்டல், செங்கோடம்பாளையம், கொங்கு அறிவாலயம், மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சிப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு, சத்துணவுடன் முட்டை வழங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 87ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 6 வயதுக்குட்பட்ட 367 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (ஊரகம்) பகுதியில் திண்டல் கொங்கு அறிவாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒரு வயது முதல் 6 வயதிற்குட்பட்ட மன வளர்ச்சி குன்றிய 30 குழந்தைகளுக்கும்;

சென்னிமலை வட்டாரம் வெள்ளோடு சேரன் மண்டல கிருத்துவ சங்கம், கோயமுத்தூர் தொண்டு நிறுவனம் மூலம் 5 செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுக்கு தலா 190 கிராம் வீதம் இணை உணவும், மதிய உணவும் ஈரோடு மற்றும் சென்னிமலை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் தேவிகுமாரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (ஈரோடு ஊரகம்) லதா, கொங்கு அறிவாலயம் முதல்வர் வெங்கடேஸ்வரி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thanks to Maalai Malar.

No comments:

Post a Comment