FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, February 1, 2014

பிப்ரவரி 3-ல் நாடாளுமன்றம் முன் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

 
01.02.2014, புதுச்சேரி
மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 3ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி காது கேளாதோர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.சரவணன், ஜி.பாலமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கடந்த 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. விதிகளின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தில்லியில் பேரணி நடத்தி, பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் புதிய உரிமைகள் சட்ட நகல் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த 2013 டிசம்பரில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் காரணமின்றி புதிய உரிமைகள் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை பாதிக்கும் வகையில் தற்போது அச்சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஊனமுற்றோரைப் பற்றிய வரையறை பழைய மருத்துவ மாதிரி அடிப்படையிலேயே உள்ளது. இது ஐ.நா. விதிகளுக்கு எதிரானதாகும். அதிக பாதிப்புள்ள பெண்கள், குழந்தைகள் பற்றிய அம்சங்கள் அதில் நீக்கப்பட்டுள்ளன.

3 சதவீத இட ஒதுக்கீடும் வேலைவாய்ப்பில் தரப்படவில்லை. தேசிய மற்றும்
மாநில அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தை மாற்றுத் திறனாளிகள் ஏற்க மாட்டார்கள்.

எனவே உரிய திருத்தங்களோடு சட்ட நகலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

நிர்வாகிகள் அபிலா, ஞானவேல், சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Thanks to Dinamani.

No comments:

Post a Comment