FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, February 1, 2014

பிப்ரவரி 3-ல் நாடாளுமன்றம் முன் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

 
01.02.2014, புதுச்சேரி
மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 3ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி காது கேளாதோர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.சரவணன், ஜி.பாலமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கடந்த 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. விதிகளின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தில்லியில் பேரணி நடத்தி, பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் புதிய உரிமைகள் சட்ட நகல் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த 2013 டிசம்பரில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் காரணமின்றி புதிய உரிமைகள் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை பாதிக்கும் வகையில் தற்போது அச்சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஊனமுற்றோரைப் பற்றிய வரையறை பழைய மருத்துவ மாதிரி அடிப்படையிலேயே உள்ளது. இது ஐ.நா. விதிகளுக்கு எதிரானதாகும். அதிக பாதிப்புள்ள பெண்கள், குழந்தைகள் பற்றிய அம்சங்கள் அதில் நீக்கப்பட்டுள்ளன.

3 சதவீத இட ஒதுக்கீடும் வேலைவாய்ப்பில் தரப்படவில்லை. தேசிய மற்றும்
மாநில அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தை மாற்றுத் திறனாளிகள் ஏற்க மாட்டார்கள்.

எனவே உரிய திருத்தங்களோடு சட்ட நகலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

நிர்வாகிகள் அபிலா, ஞானவேல், சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Thanks to Dinamani.

No comments:

Post a Comment