FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 4, 2014

மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

03.02.2014,  Delhi,
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது.

ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

"காலதாமதம்"
இந்த நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வான இந்த அமர்வில் இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் , இந்த மசோதா மீண்டும் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும்.

இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று போராட்டத் தலைவர்கள் கூறினர்.

தற்போதைய நாடாளுமன்றத்தில், சுமார் 126 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. கடந்த சில கூட்டத்தொடர்கள் அரசியல் குழப்பம் காரணமாக முழுமையாக நடக்காமல் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படமுடியவில்லை.

நாட்டில் சுமார் 40லிருந்து 90 மிலியன் பேர் உடல் ஊனம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என்று போராட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுடில்லியில் இந்தியா கேட் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

பல்தரப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வையற்றோர் உட்பட 17 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது இவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும், இவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை இவர்களது போராட்டம் ஓயாது எனவும் முழக்கமிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காது கேளாதோர் அமைப்புக்கான தேசிய தலைவர் சோரின் சின்ஹா, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதற்காக போராடி வருவதாக கூறினார்.

நெடுங்காலமாக தொடரும் இந்த கால தாமதத்திற்கு எதிராகப் போராடிவரும் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைப்பதாகவும், பல்வேறு கட்டங்களிலும் நம்பிக்கை அளித்த மத்திய அரசு, தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிலவும் அமளியை காரணம் காட்டுவது வருத்தம் அளிப்பதாக தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு அமைப்பின் செயலர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஜாவேத் அபிதி இந்த போராட்டம் குறித்து பிபிசியிடம் தெரிவிக்கையில், வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முறை இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் இதற்கான வாய்ப்பை பெற குறைந்தது இரண்டு வருடங்களாவது காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

அதோடு இது குறித்து இவர்களது பிரதிநிதிகள் குழு அனைத்து கட்சி தலைவர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அனைவரும் இவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்பிக்கை கூறியுள்ளதால் இந்த முறை மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்காது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதை மனதில் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
Thanks to

No comments:

Post a Comment