FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 4, 2014

மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

03.02.2014,  Delhi,
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது.

ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

"காலதாமதம்"
இந்த நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வான இந்த அமர்வில் இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் , இந்த மசோதா மீண்டும் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும்.

இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று போராட்டத் தலைவர்கள் கூறினர்.

தற்போதைய நாடாளுமன்றத்தில், சுமார் 126 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. கடந்த சில கூட்டத்தொடர்கள் அரசியல் குழப்பம் காரணமாக முழுமையாக நடக்காமல் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படமுடியவில்லை.

நாட்டில் சுமார் 40லிருந்து 90 மிலியன் பேர் உடல் ஊனம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என்று போராட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுடில்லியில் இந்தியா கேட் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

பல்தரப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வையற்றோர் உட்பட 17 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது இவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும், இவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை இவர்களது போராட்டம் ஓயாது எனவும் முழக்கமிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காது கேளாதோர் அமைப்புக்கான தேசிய தலைவர் சோரின் சின்ஹா, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதற்காக போராடி வருவதாக கூறினார்.

நெடுங்காலமாக தொடரும் இந்த கால தாமதத்திற்கு எதிராகப் போராடிவரும் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பதிலாக கிடைப்பதாகவும், பல்வேறு கட்டங்களிலும் நம்பிக்கை அளித்த மத்திய அரசு, தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிலவும் அமளியை காரணம் காட்டுவது வருத்தம் அளிப்பதாக தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு அமைப்பின் செயலர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஜாவேத் அபிதி இந்த போராட்டம் குறித்து பிபிசியிடம் தெரிவிக்கையில், வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முறை இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் இதற்கான வாய்ப்பை பெற குறைந்தது இரண்டு வருடங்களாவது காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

அதோடு இது குறித்து இவர்களது பிரதிநிதிகள் குழு அனைத்து கட்சி தலைவர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், அனைவரும் இவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்பிக்கை கூறியுள்ளதால் இந்த முறை மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்காது என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதை மனதில் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
Thanks to

No comments:

Post a Comment