FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, February 6, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

06.02.2014,
நெல்லை டவுண் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து நாகலட்சுமி – ராஜா மற்றும் தங்கலட்சுமி –முத்துகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் சங்கரசுப்பு தலைமையில் கோட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2 ஜோடிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு 5 கிராம் தங்க தாலியும் மணமகன் –மணமகளுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் 15 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, என சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ரோட்டரி இயக்குனர் பரமசிவன், லக்ஷ்மி திரையரங்கின் மேலாளர்கள் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்களின் உற்றார் உறவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Sathiyam TV

No comments:

Post a Comment