FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, February 6, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

06.02.2014,
நெல்லை டவுண் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து நாகலட்சுமி – ராஜா மற்றும் தங்கலட்சுமி –முத்துகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் சங்கரசுப்பு தலைமையில் கோட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2 ஜோடிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு 5 கிராம் தங்க தாலியும் மணமகன் –மணமகளுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் 15 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, என சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ரோட்டரி இயக்குனர் பரமசிவன், லக்ஷ்மி திரையரங்கின் மேலாளர்கள் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்களின் உற்றார் உறவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Sathiyam TV

No comments:

Post a Comment