FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, February 6, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

06.02.2014,
நெல்லை டவுண் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து நாகலட்சுமி – ராஜா மற்றும் தங்கலட்சுமி –முத்துகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் சங்கரசுப்பு தலைமையில் கோட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2 ஜோடிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு 5 கிராம் தங்க தாலியும் மணமகன் –மணமகளுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் 15 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, என சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ரோட்டரி இயக்குனர் பரமசிவன், லக்ஷ்மி திரையரங்கின் மேலாளர்கள் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்களின் உற்றார் உறவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Sathiyam TV

No comments:

Post a Comment