FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 4, 2014

மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

03.02.2014, திருச்சி:
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதிகிராஃப்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சிவக்குமார், புஷ்பநாதன், சரவணன், அப்துல்கலாம், நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் பல பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, சட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க தகுந்த வரைமுறை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஐந்து பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment