FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 4, 2014

மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

03.02.2014, திருச்சி:
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதிகிராஃப்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சிவக்குமார், புஷ்பநாதன், சரவணன், அப்துல்கலாம், நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் பல பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, சட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க தகுந்த வரைமுறை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஐந்து பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment