FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 4, 2014

மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

03.02.2014, திருச்சி:
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருச்சி ஜங்ஷன் காதிகிராஃப்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரமேஷ்பாபு, சிவக்குமார், புஷ்பநாதன், சரவணன், அப்துல்கலாம், நெடுஞ்செழியன், ரமேஷ், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் பல பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, சட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. சட்டம் ஊனமாக்கப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க தகுந்த வரைமுறை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், ஐந்து பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment