FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, June 30, 2015

மத்திய அரசுப் பணிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு

புது தில்லி, 30 June 2015
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

Friday, June 26, 2015

Hearing impaired? Rebate up to Rs 1.25 lakh admissible

AISC's ace leaves deaf tennis players numb

பாலியல் பலாத்காரம்: DEAF வாலிபர் கைது

25.06.2015, இளையான்குடி: 
தாயமங்கலம் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.தாயமங்கலம் அருகேயுள்ள கலைக்குளத்தை சேர்ந்த ஏசு அருள் மனைவி செல்வராணி,38. இவர் நேற்று முன்தினம் மாலை பனைமட்டை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல்,30, (வாய் பேச முடியாதவர்) செல்வராணியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வராணி கூச்சல் போடவும் ஓடிவிட்டார். செல்வராணி புகாரின் படி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், இமானுவேலை கைது செய்தார்.

DEAF மாற்றுத்திறனாளி மாணவியை வெளியேற்றிய அரசுப்பள்ளி… மீண்டும் சேர்க்க உத்தரவு

26.06.2015, ராமநாதபுரம்: 
காது கேளாத காரணத்தால் பேராவூர் அரசு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தலித் மாணவி முத்துலட்சுமியை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் ஊராட்சிகுட்பட்டது பழங்குளம். இந்த ஊரை சேர்ந்தவர் அழகர் (55). பேராவூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கமலா. வாய் பேச முடியாதவர். இவர்களுக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மணிவேலுக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் முத்துலெட்சுமிக்கு 16 வயதாகிறது. படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு காது கேட்பது குறைந்து கொண்டே வந்து திடீரென காது முழுமையாக கேட்காம் போய் விட்டது. இதனால் வகுப்பில் பாடம் நடத்துவதை கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. டிசி கொடுத்த தலைமைஆசிரியை காது கேட்காததால் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இதைக் கண்டுபிடித்த ஆசிரியை முத்துலட்சுமியை எல்லா மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தியதோடு இனி வகுப்பு வரவேண்டாம் என்று சொன்னதோடு, அந்தப் பள்ளியை விட்டே துரத்த தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மகளுக்காக தந்தை கெஞ்சியதையும் காதில் வாங்காத செவிடாய் தலைமையாசிரியரும் முத்துலட்சுமியிடம் டிசி கொடுத்து அனுப்பியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் உதவி தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தன்னார்வ நிறுவத்தின் மூலம் தையல் கற்றுக் கொண்டார். தையல் மிஷின் வாங்க நிதி கேட்டு ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனுகொடுத்த போது, 15 வயது தொழில் தொடங்கும் வயதல்ல என்று சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் முத்துலட்சுமி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தையல்மிஷின் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் புதிய காது கேட்கும் கருவியை வாங்க பரிந்துரைத்துள்ளார். கல்வி அதிகாரிகள் விசாரணை இந்நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, பேராவூர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். முத்துலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் டி.சி. கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினார். இடைநிற்க யார் காரணம் விசாரணையின்போது, ''காது கேட்கும் கருவி மாட்டிக் கொண்டு வர முத்துலட்சுமி தயங்கியதால் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், அதனால் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டதாகவும்" ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர். மாணவியை சேர்க்க உத்தரவு எந்த சூழலிலும் பள்ளி மாணவர்கள் இடைநிற்க ஆசிரியர்கள் காரணமாக இருக்கக் கூடாது என எச்சரித்த முதன்மை கல்வி அலுவலர், முத்துலட்சுமியை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துலட்சுமி பேராவூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி விரும்பவில்லை ஆனால், கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையையும், தனக்கு உள்ள குறைபாட்டினையும் எண்ணிய முத்துலட்சுமி, மீண்டும் படிக்க செல்ல விருப்பம் இல்லை என முதன்மை கல்வி அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனாலும் விடாமல் முத்துலட்சுமியை சமாதானப்படுத்திய முதன்மை கல்வி அலுவலர், வேண்டுமானால் இன்னும் இரண்டு, மூன்று நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார். உளவியல் சிகிச்சை மேலும், முத்துலட்சுமியின் தயக்கத்தை போக்கும் வகையில் அவரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி, பள்ளிக்கு மீண்டும் அனுப்புமாறு முத்துலட்சுமியின் பெற்றோரிடமும் முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு தண்டனை என்ன? முத்துலட்சுமி மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொண்டு முன்புபோல பள்ளிக்கு செல்ல முத்துலட்சுமி ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அப்பள்ளியின் ஆசிரியர்களே. முத்துலட்சுமியை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தியதோடு அவருக்குரிய அடிப்படை உரிமை பறித்த அந்த அசிரியையும் இதில் தொடர்புடைய மற்ற ஆசிரியர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறவியிலேயே காது கேளாத, வாய்பேசாத 3 குழந்தைகளுக்கு நவீன ஆபரேஷன்.. அரசு டாக்டர்கள் சாதனை

26.06.2015. கன்னியாகுமரி: 
பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 3 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்ப்ளான்ட்‘ என்கிற நவீன அறுவை சிகிச்சை செய்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். குமரி மாவட்டம் கடையல் பகுதியைச் சேர்ந்த அல்சாத் மகன் அமீர் (இரண்டரை வயது), புத்தன்துறையைச் சேர்ந்த மணிகண்டன் மகள் நிஷாந்தினி (மூன்றரை), குளச்சலைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் ரித்திஷ் சான்டரினோ (மூன்றரை). இந்த மூன்று குழந்தைகளுக்கும் பிறவியிலேயே காது கேளாமை, வாய்பேச முடியாமை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்க அதிகப் பணம் செலவாகும் என எண்ணி அவர்களது பெற்றோர் அப்படியே விட்டு விட்டனர். இந்நிலையில், அரசின் சலுகையைப் பெறுவதற்காக இம்மூன்று குழந்தைகளின் பெற்றோரும் மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு இக்குழந்தைகளைச் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சை மூலம் மீண்டும் அக்குழந்தைகளுக்கு காது கேட்கும் சக்தி மற்றும் வாய்ப்பேசும் சக்தியைப் பெறா முடியும் என பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மூன்று குழந்தைகளுக்கும் "இம்ப்ளான்ட் காக்ளியார்" என்கிற நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் கேட்கும் திறனை முதல்கட்டமாக பெற்றுள்ளனர். வாய் பேசுவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், பேசுவதற்கு காலதாமதம் ஆனாலும் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் மரபு வழியாலும், பேறுகாலத்தின் போது ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் சில நிகழ்வுகளாலும் உள் காது வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கேட்கும் திறன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்படும் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் கருவி பொருத்தி 4 மாதங்கள் கண்காணிக்கப்படும். இதில் சிறிதும் முன்னேற்றம் இல்லாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளான்ட்‘ சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை குமரி மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகளின் பெற்றோர் ‘காக்ளியர் இம்பிளான்ட்‘ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளை அணுகியபோது ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்பதை அறிந்து கவலை அடைந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.8½ லட்சம் செலவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையை, இதற்கு முன்பு சென்னை மற்றும் கோவையிலேயே செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது தென் தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்தில் முதல்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சையை கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் பாரதிமோகன் தலைமையில் காது, மூக்கு, தொண்டை டாக்டர் ர்கள் ஜூடு சைரஸ், சுநீர், பிஜீ, மதன்ராஜ் மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் வாசுகிநாதன், எட்வர்டு ஜான்சன், பிலிஸ்டன், ரஜினிஷ் ஆகியோர் மேற்கொண்டனர். சிகிச்சைக்கு தேவையான அதிநவீன நுண்ணோக்கிகள் மற்றும் நுண்கருவிகள் சென்னையில் இருந்து டாக்டர் மோகன் காமேஸ்வரன் வழிகாட்டுதலில் பெறப்பட்டுள்ளது. காக்ளியர் இம்பிளான்ட் பொருத்திய குழந்தைகள் பேசும் திறனில் இயல்பான நிலையை அடைய ஒரு ஆண்டுக்கு கேட்டல் மற்றும் பேசும் பயிற்சியை பெற வேண் டும். இதற்கு முன்பு குமரி மாவட்டத்தில் இருந்து 38 குழந்தைகள் சென்னை போன்ற இடங்களில் இத்தகைய சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் முதல் 6 ஆண்டுக்குள் சிகிச்சையை மேற்கொண்டால் 100 சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கேட்கும் திறனில் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும், பேசுவதற்கு காலதாமதம் ஆனாலும் உடனடியாக அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்றார்.

அரசு காதுகேளாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

26.06.2015, காஞ்சிபுரம் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் சார்பில், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய நகரங்களில் மேல்நிலைப் பள்ளிகளும், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, ஊட்டி ஆகிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளிகளாகவும், தாம்பரம், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் நடுநிலைப் பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, ஆதரவற்ற செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 1975-ஆம் ஆண்டு தாமல்வார் தெருவில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 2004-ஆம் ஆண்டு முதல் சதாவரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு முன்பருவ பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 52 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 4 ஜோடி விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளும், விடுதி மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் 2 ஜோடி விலையில்லா சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

தருமபுரி, தஞ்சாவூரில்தான் மேல்நிலைக் கல்வி!
இந்த நிலையில், இங்கு 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வியைத் தொடர வேண்டுமானால் தஞ்சாவூர் அல்லது தருமபுரியில் இயங்கும் காதுகேளாதோர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராமாபுரம் எம்ஜிஆர் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதோடு, கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் மேல்நிலைக் கல்வியைத் தொடருவதில்லை.

தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்!

இதனால், இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து இந்தப் பள்ளியின் மாணவர்களின் தந்தை எம்.ஆறுமுகம் கூறியதாவது:

இந்தப் பள்ளியில் எனது முதல் குழந்தை 5-ஆம் வகுப்பும், 2-வது குழந்தை 2-வது வகுப்பு படித்து வருகின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் சிறப்பாக உள்ளது. ஆனால் 10-ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் நிலைதான் உள்ளது.

அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்றால், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

12-ஆம் வகுப்புக்கு பிறகு இந்த மாணவர்களுக்கென தனிக் கல்லூரி இல்லை. காதுகேளாதோர் பள்ளிகளில் உடற்கல்விக்காகத் தனி ஆசிரியர்கள் இல்லை. எனவே உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணியிடத்தையும் நியமிக்க வேண்டும் என்றார்.

"எலி' பட வசனத்தை நீக்க மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

அண்மையில் வெளியான "எலி' திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு அந்தக் கூட்டமைப்பு அனுப்பிய கடித விவரம்:
அண்மையில் வெளியிடப்பட்ட "எலி' தமிழ்த் திரைப்படத்தில் வரும் சிறைச்சாலைக் காட்சியில் "நீங்கதான் ஊமை என்று நினைச்சா, என்னை ஊமையாக்கிட்டீங்களே' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சிக்கு இந்த வசனம் தேவையே இல்லை என்பதோடு, மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் சட்டப் பிரிவு (3)பி-இல் இதுபோன்று மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெறக் கூடாது எனக் குறிப்பிடப்படிருந்தும், தணிக்கைக் குழு இதை அனுமதித்துள்ளது மாற்றுத் திறனாளிகளிடையே மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திரைப்படத்தில் அந்த வசனத்தை நீக்க வேண்டும்; மேலும், தொலைக்காட்சிகளில் இந்தத் திரைப்பட விளம்பரத்தில் இடம்பெற்று வரும் இந்த வசனத்தையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

TAKE CARE EYE


VID-20150625-WA0002.mp4
Mobile but
Posted by Hai Hello on Thursday, June 25, 2015

200 people from the fake certificate with disabilities in government suspends work | மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 200 பேர் சஸ்பெண்ட்

வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

மத்­திய அரசின் மறு­வாழ்வு மையத்தில் நடை­பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்­கேற்ற மாற்றுத் திற­னா­ளிகள்.
24.06.2015, சென்னை, கிண்டியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு, 200 மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சான்று வழங்கப்பட்டது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையம், சென்னை, கிண்டியில் உள்ளது; இது, 1979ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், 'எல்.சி., புராஜக்ட்' நாகப்பட்டினம் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது.

மறுவாழ்வு மைய வளாகத்தில் நடந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 200 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மைய இணை இயக்குனர் தங்கராஜ், எல்.சி., புராஜக்ட் திட்ட இயக்குனர் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thursday, June 18, 2015

TOP BPO SPONSORED TRAINING FOR DEAF PEOPLE !!!


TOP BPO SPONSORED TRAINING FOR DEAF PEOPLE !!!
LOCATION : BANGALORE
DATE : 22ND JUNE - 21ST JULY 2015
QUALIFICATION : ANY GRADUATE / POST GRADUATE
HURRY...LIMITED SEATS AVAILABLE.!
CONTACT :
SEEMA : +91 8105700733 (seema@v-shesh.com)
SONALI :+91 8970948989 (sonali@v-shesh.com)
FROM : v-shesh Team

Disabilities Rights Bill: Activists worried over guardianship - The Hindu

Wednesday, June 17, 2015

இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை,17 June 2015
இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரத்தை கீதா பவன் அறக்கட்டளை இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. இந்த, சுயம்வரத்தில் கலந்து காùள்ள ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இயக்குநர் அசோக்குமார் கோயல் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் 248 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அறக்கட்டளையின் விதிமுறைப்படியும், சட்டத்தின் படியும் திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது.

22 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றாலும், திருமணம் புரிவதற்கான சூழல் 20 சதவீதமே உள்ளது. ஆகவே, மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பிறகு, சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதில், பிரிவு, மதம் ஆகியவை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசமாக நடத்தப்படுகிறது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் கூறியது: திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளிகள், மனைவியை இழந்தவர், விவாகரத்தானவர், விதவை உள்ளிட்டோர் அறக்கட்டளையின் சார்பில் மாவட்டந்தோறும் நடக்கும் சுயம்வரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். போலியோவினால் ஊனமுற்றவர், பிறவி ஊனம், வாய்பேச முடியாதோர், தவழ்ந்து செய்வோர், விபத்தினால் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண் மாற்றுத்திறனாளி 45 வயதிற்குள்ளும், பெண் மாற்றுத்திறனாளி 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பிறகு, தகுதி, விருப்பத்தின் அடிப்படையில் விரும்பிய மாற்றுத்திறனாளியை தேர்வு செய்து முழு சம்மதத்துடன் திருமணங்கள் நடத்தப்பட உள்ளது.

இத்திருமணங்கள் இந்து முறைப்படி, அரசு திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதுவரை 198 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளது. இது பாúன்ற திருமணங்களால் மாற்றுத்திறனாளிகளின் மீதுள்ள சமூக பார்வை மாறிவருகிறது.

விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, 334, அவ்வைசண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை -86 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் சுயம்வரம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை (ஆக.23) - 94451 98100, விழுப்புரம் (ஜூலை 19) -98947 26726, திருவாரூர் (ஜூலை 26) - 94867 41985, மதுரை (ஆக.9) - 96004 50676, ஈரோடு (ஆக.16) - 80129 50771 ஆகிய மாவட்டங்களில், குறிப்பிட்ட நாளிலும், எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

கீதாபவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம்: 5 மாவட்டங்களில் சுயம்வரம் - தி இந்து

கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ல் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு பிருந்தா காரத் பங்கேற்கிறார்

கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2வது மாநில மாநாடு கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ம்தேதிகளில் நடைபெறுகிறது.மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஜூன் 22ம்தேதி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பாக சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பேரணி கோவில்பட்டி ராமதாஸ் பூங்காவில் தொடங்கி காந்தி மைதானத்தில் நிறைவடைகிறது. அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தாகாரத் கலந்து கொள்கிறார். மேலும் ஜூன் 23, 24ம் தேதிகளில் கோவில்பட்டியில் உள்ள தாமரை மகால் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


மாற்றுத்திறனாளிகளில் சாதனையாளர்களை கவுரவித்து பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ஜூன் 22ம்தேதி மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியாக கண்தானம் மற்றும் உறுப்பு தான முகாம் நடைபெறும்.

Monday, June 15, 2015

வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு



பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

"மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை'

தாம்பரம்,15 June 2015


மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் பொறுப்புணர்வோடும் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு, மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பயிலரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு தொடர்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை டாக்டர் நீரதா சந்திரமோகன் வெளியிட, பாரத் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வே.கனகசபை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் சுமார் 3.48 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,வாய் பேசாமை குறைபாடு,கேட்கும் திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் வாழும் மாற்றுத் திறனாளிகள்-சிறப்புக் குழந்தைகளுக்கு சிகிச்சை, பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் குறைபாடு சான்றிதழ் அளிப்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

மாற்றுத் திறனாளிகள் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது: ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்

15.06.2015, சென்னை 
பிறரிடம் எந்த விதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் தெரிவித்தார்.
இவர் தற்போது இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பெனோ ஜெஃபைன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஐ.எஃப்.எஸ். தேர்வில் இதுவரை பார்வையற்றோர் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
தினமும் 5 மணி நேரம்...
என்னைப் பொருத்தவரை எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படித்த தகவல்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எனவே, ஒரே நாளில் 10 புத்தகங்களைப் படிப்பதை விட, ஒரு புத்தகத்தை 10 முறை படிப்பது சிறந்தது. அதாவது திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் உள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதியும்.
இந்தத் தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும் 5 மணி நேரம் திட்டமிட்டு சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பழைய வினாத்தாள்களையும் தவறாமல் படிப்பது அவசியம். இதை நான் தொடர்ந்து கடைப்பிடித்ததால் வெற்றி வசமானது. நான் எந்தப் புத்தகத்தை விரும்புகிறேனோ அதை எனது தாய் மேரி, எனக்கு பலமுறை படித்துக் காட்டுவார். என்னைச் சுற்றி இருந்தவர்களை என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே நினைக்கவில்லை. என் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முன் மாதிரி: வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாதான் என் முன்மாதிரி.
கணினியில் ஜாஸ் (ஒஹஜ்ள்) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நன்றாக தட்டச்சு செய்ய பயிற்சி மேற்கொண்டது குடிமைப்பணித் தேர்வை எழுத மிகவும் உதவியாக இருந்தது.
அகில இந்திய வானொலி, தமிழ், ஆங்கிலத் தொலைக் காட்சிகளில் அன்றாடச் செய்திகளை தொடர்ந்து கேட்டது, பொது அறிவு தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெற, பிறரைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டும். பிறரிடம் எந்தவிதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பெனோ ஜெஃபைனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அகாதெமியின் இயக்குநர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Why activists are upset with Census disability numbers

Census 2011 shows the disabled have a better chance of getting married than other Indians.
Written by ZEESHAN SHAIKH | Mumbai |Updated: June 15, 2015 3:35 am

The disabled in India stand a better chance of getting married than other Indians, according to data in the 2011 Census. Census data show 41.72 per cent of the disabled population have never been married — the corresponding figure for Indians who were never married is 47.14 per cent.

The findings of the Census go against the popular perception that a disabled woman faces greater problems in getting married.

According to the Census report, titled Disabled Population by Type of Disability, Marital Status, Age and Sex, 38.01 per cent of disabled women have never been married. The percentage of Indian women who have never been married stands at 42.20.

For men, the corresponding numbers are 44.64 per cent and 51.80 per cent.


Activists working with the disabled have criticised the findings as erroneous, and alleged that the methods used in the survey raise questions over the state’s intention to help the disabled.

“The findings of the Census data need to be contested. They do not give the true picture of the severity of this issue. The entire way that the Census is conducted gives the impression that the state wants to ignore the fact that the numbers of the disabled, and the problems they face, are rising,” said Seema Baquer, director, Concerned Action, which works for equally opportunities for the disabled.

Activists believe that besides faulty survey methods, the social stigma attached with disability may have led to the Census throwing up inaccurate findings.

As per the 2011 Census, the number of disabled in India is 2.68 crore, which is 2.21 per cent of the population. This is marginally higher than 2001, when the disabled population was 2.19 crore, and the disabled made up 2.13 per cent of the population. However, the 2011 Census recognised eight categories of disabilities — up from the five in 2001 — including mental illness.

In spite of the increased number of categories, activists claim that the number of disabled is underreported. The United Nations believes that the total number of disabled in India stands at five to six per cent of the total population, which is almost three times the government’s estimate.

“It is difficult to rely on data that is collected this way. The system is erroneous. For years we have been demanding the promotion of Village Disability Registers whereby the disabled can voluntarily come in and register themselves, and provide informationabout their conditions. That is something that is not taking place,” Dr Indumathi Rao, former member of the National Commission for Persons with Disabilites, said.

Rao added that finding precise numbers was necessary to formulate an effective policy of addressing the problems and concerns of the disabled.

“Realizing the severity of the problem is necessary to formulate a policy to tackle it. But if you are basing your policies on flawed data no policy will succeed,” Rao said.