FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 10, 2015

மாணவர்கள் இல்லாமல் செயல்படும் அரசு காதுகேளாதோர் பள்ளி

10.06.2015, காரைக்குடி:
காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்கள் யாருமின்றி, ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் பழைய அரசு மருத்துவ மனை அருகில், அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி சார்பில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய நிலவரத்தின் படி 2 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு சமையலர் நியமனம் செய்யப் பட்டனர். தொடர்ந்து நகராட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 2005-ம் ஆண்டு முதல், இப்பள்ளி மாவட்ட சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதிய பணியிடம் நிரப்பப் படாததால், 2006-ம் ஆண்டிலிருந்து விடுதி வசதி நிறுத்தப்பட்டது.
அது முதற்கொண்டு மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் 8 மாணவர்கள், 2013-14-ல் 11 மாணவர்கள், 2014-15-ம் ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. நேற்று பள்ளி தொடங்கிய நிலையில், இதுவரை மாணவர் யாரும் சேராததால், ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment