FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, June 10, 2015

மாணவர்கள் இல்லாமல் செயல்படும் அரசு காதுகேளாதோர் பள்ளி

10.06.2015, காரைக்குடி:
காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்கள் யாருமின்றி, ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் பழைய அரசு மருத்துவ மனை அருகில், அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி சார்பில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய நிலவரத்தின் படி 2 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு சமையலர் நியமனம் செய்யப் பட்டனர். தொடர்ந்து நகராட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 2005-ம் ஆண்டு முதல், இப்பள்ளி மாவட்ட சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதிய பணியிடம் நிரப்பப் படாததால், 2006-ம் ஆண்டிலிருந்து விடுதி வசதி நிறுத்தப்பட்டது.
அது முதற்கொண்டு மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் 8 மாணவர்கள், 2013-14-ல் 11 மாணவர்கள், 2014-15-ம் ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. நேற்று பள்ளி தொடங்கிய நிலையில், இதுவரை மாணவர் யாரும் சேராததால், ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment