FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, June 10, 2015

மாணவர்கள் இல்லாமல் செயல்படும் அரசு காதுகேளாதோர் பள்ளி

10.06.2015, காரைக்குடி:
காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்கள் யாருமின்றி, ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் பழைய அரசு மருத்துவ மனை அருகில், அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி சார்பில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய நிலவரத்தின் படி 2 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு சமையலர் நியமனம் செய்யப் பட்டனர். தொடர்ந்து நகராட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 2005-ம் ஆண்டு முதல், இப்பள்ளி மாவட்ட சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதிய பணியிடம் நிரப்பப் படாததால், 2006-ம் ஆண்டிலிருந்து விடுதி வசதி நிறுத்தப்பட்டது.
அது முதற்கொண்டு மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் 8 மாணவர்கள், 2013-14-ல் 11 மாணவர்கள், 2014-15-ம் ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. நேற்று பள்ளி தொடங்கிய நிலையில், இதுவரை மாணவர் யாரும் சேராததால், ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment