FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, June 10, 2015

மாணவர்கள் இல்லாமல் செயல்படும் அரசு காதுகேளாதோர் பள்ளி

10.06.2015, காரைக்குடி:
காரைக்குடியில் செயல்பட்டு வரும் அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்கள் யாருமின்றி, ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகிறது.காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் பழைய அரசு மருத்துவ மனை அருகில், அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த 1940ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி சார்பில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போதைய நிலவரத்தின் படி 2 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு சமையலர் நியமனம் செய்யப் பட்டனர். தொடர்ந்து நகராட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 2005-ம் ஆண்டு முதல், இப்பள்ளி மாவட்ட சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாற்றுதிறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதிய பணியிடம் நிரப்பப் படாததால், 2006-ம் ஆண்டிலிருந்து விடுதி வசதி நிறுத்தப்பட்டது.
அது முதற்கொண்டு மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 2012-13ம் ஆண்டில் 8 மாணவர்கள், 2013-14-ல் 11 மாணவர்கள், 2014-15-ம் ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே படித்தனர். இவர்களும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. நேற்று பள்ளி தொடங்கிய நிலையில், இதுவரை மாணவர் யாரும் சேராததால், ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டும் இப்பள்ளி இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment