FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, June 30, 2015

மத்திய அரசுப் பணிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு

புது தில்லி, 30 June 2015
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

No comments:

Post a Comment