FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 30, 2015

மத்திய அரசுப் பணிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு

புது தில்லி, 30 June 2015
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

No comments:

Post a Comment