FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, June 30, 2015

மத்திய அரசுப் பணிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு

புது தில்லி, 30 June 2015
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 15 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை மத்தியப் பணியாளர் நலன் - பயிற்சித் துறை திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு மாற்று திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்து தலா ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு ஒவ்வொரு பிரிவின் கீழும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தோர், செவித் திறன் குறைபாடுடையோர், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உடலில் குறைந்தது 40 சதவீதக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வயது உச்சவரம்பில் இந்த நீட்டிப்புச் சலுகை அளிக்கப்படும்.
வயது வரம்பு தளர்வு, ஐ.ஏ.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல 56 வயதைக் கடந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வயது வரம்பு தளர்வுச் சலுகை கிடையாது.

No comments:

Post a Comment