FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, June 5, 2015

மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க உத்தரவு

05.06.2015,
நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று முதன்மை தேர்வை எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒருமணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரி.பரந்தாமன், கடந்த 1993-ஆம் ஆண்டு மாநில சமூக நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

முன்னதாக மனுதாரர் ரமேஷ் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் மூலம் தேர்வு எழுதும் வேளையில் கூடுதலாக வழங்கப்படும் அரைமணி நேரம் போதவில்லை என்றும், இதனை ஒருமணி நேரமாக அதிகரித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார்.

No comments:

Post a Comment