FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, June 5, 2015

மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க உத்தரவு

05.06.2015,
நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று முதன்மை தேர்வை எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒருமணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரி.பரந்தாமன், கடந்த 1993-ஆம் ஆண்டு மாநில சமூக நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன்று தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

முன்னதாக மனுதாரர் ரமேஷ் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் மூலம் தேர்வு எழுதும் வேளையில் கூடுதலாக வழங்கப்படும் அரைமணி நேரம் போதவில்லை என்றும், இதனை ஒருமணி நேரமாக அதிகரித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார்.

No comments:

Post a Comment