FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, June 9, 2015

ஈரோடு அருகே காது கேட்காது, வாய் பேசாது மாற்றுத்திறனாளி குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெற்றோர்


09.06.2015, பவானி: 
ஈரோடு மாவட்டம் அருகே பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 4 வயது ஆண் குழந்தை அங்கு சுற்றி திரிந்தது.யாரும் கண்டுகொள்ளாத அந்த குழந்தையை கண்டறிந்த சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேஷாக், குழந்தை யாருடையது என விசாரித்துள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஆனால் குழந்தை தவித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பையும், அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது.

அதில், இந்த குழந்தைக்கு காது கேட்காது, வாய் பேசாது மற்றும் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றும் நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் இந்த குழந்தையை எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீசார் ஆர்.என்.புதூர் சி.எம். நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளி குழந்தையை பரிதாவமாக தவிக்க விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment