FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, June 9, 2015

ஈரோடு அருகே காது கேட்காது, வாய் பேசாது மாற்றுத்திறனாளி குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெற்றோர்


09.06.2015, பவானி: 
ஈரோடு மாவட்டம் அருகே பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 4 வயது ஆண் குழந்தை அங்கு சுற்றி திரிந்தது.யாரும் கண்டுகொள்ளாத அந்த குழந்தையை கண்டறிந்த சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேஷாக், குழந்தை யாருடையது என விசாரித்துள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஆனால் குழந்தை தவித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பையும், அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது.

அதில், இந்த குழந்தைக்கு காது கேட்காது, வாய் பேசாது மற்றும் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றும் நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் இந்த குழந்தையை எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீசார் ஆர்.என்.புதூர் சி.எம். நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளி குழந்தையை பரிதாவமாக தவிக்க விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment