FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, June 9, 2015

ஈரோடு அருகே காது கேட்காது, வாய் பேசாது மாற்றுத்திறனாளி குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெற்றோர்


09.06.2015, பவானி: 
ஈரோடு மாவட்டம் அருகே பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 4 வயது ஆண் குழந்தை அங்கு சுற்றி திரிந்தது.யாரும் கண்டுகொள்ளாத அந்த குழந்தையை கண்டறிந்த சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேஷாக், குழந்தை யாருடையது என விசாரித்துள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஆனால் குழந்தை தவித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பையும், அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது.

அதில், இந்த குழந்தைக்கு காது கேட்காது, வாய் பேசாது மற்றும் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றும் நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் இந்த குழந்தையை எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீசார் ஆர்.என்.புதூர் சி.எம். நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளி குழந்தையை பரிதாவமாக தவிக்க விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment