FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, June 9, 2015

ஈரோடு அருகே காது கேட்காது, வாய் பேசாது மாற்றுத்திறனாளி குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெற்றோர்


09.06.2015, பவானி: 
ஈரோடு மாவட்டம் அருகே பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சுமார் 4 வயது ஆண் குழந்தை அங்கு சுற்றி திரிந்தது.யாரும் கண்டுகொள்ளாத அந்த குழந்தையை கண்டறிந்த சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேஷாக், குழந்தை யாருடையது என விசாரித்துள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஆனால் குழந்தை தவித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பையும், அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது.

அதில், இந்த குழந்தைக்கு காது கேட்காது, வாய் பேசாது மற்றும் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்றும் நல்ல எண்ணம் கொண்ட உள்ளங்கள் இந்த குழந்தையை எடுத்து பராமரிக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீசார் ஆர்.என்.புதூர் சி.எம். நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளி குழந்தையை பரிதாவமாக தவிக்க விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment