FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, June 26, 2015

"எலி' பட வசனத்தை நீக்க மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

அண்மையில் வெளியான "எலி' திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு அந்தக் கூட்டமைப்பு அனுப்பிய கடித விவரம்:
அண்மையில் வெளியிடப்பட்ட "எலி' தமிழ்த் திரைப்படத்தில் வரும் சிறைச்சாலைக் காட்சியில் "நீங்கதான் ஊமை என்று நினைச்சா, என்னை ஊமையாக்கிட்டீங்களே' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சிக்கு இந்த வசனம் தேவையே இல்லை என்பதோடு, மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் சட்டப் பிரிவு (3)பி-இல் இதுபோன்று மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெறக் கூடாது எனக் குறிப்பிடப்படிருந்தும், தணிக்கைக் குழு இதை அனுமதித்துள்ளது மாற்றுத் திறனாளிகளிடையே மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திரைப்படத்தில் அந்த வசனத்தை நீக்க வேண்டும்; மேலும், தொலைக்காட்சிகளில் இந்தத் திரைப்பட விளம்பரத்தில் இடம்பெற்று வரும் இந்த வசனத்தையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment