FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 26, 2015

"எலி' பட வசனத்தை நீக்க மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

அண்மையில் வெளியான "எலி' திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு அந்தக் கூட்டமைப்பு அனுப்பிய கடித விவரம்:
அண்மையில் வெளியிடப்பட்ட "எலி' தமிழ்த் திரைப்படத்தில் வரும் சிறைச்சாலைக் காட்சியில் "நீங்கதான் ஊமை என்று நினைச்சா, என்னை ஊமையாக்கிட்டீங்களே' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சிக்கு இந்த வசனம் தேவையே இல்லை என்பதோடு, மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் சட்டப் பிரிவு (3)பி-இல் இதுபோன்று மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெறக் கூடாது எனக் குறிப்பிடப்படிருந்தும், தணிக்கைக் குழு இதை அனுமதித்துள்ளது மாற்றுத் திறனாளிகளிடையே மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திரைப்படத்தில் அந்த வசனத்தை நீக்க வேண்டும்; மேலும், தொலைக்காட்சிகளில் இந்தத் திரைப்பட விளம்பரத்தில் இடம்பெற்று வரும் இந்த வசனத்தையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment