FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, June 15, 2015

பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment