FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 15, 2015

பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment