FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, June 15, 2015

பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment