FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, June 26, 2015

அரசு காதுகேளாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

26.06.2015, காஞ்சிபுரம் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் சார்பில், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய நகரங்களில் மேல்நிலைப் பள்ளிகளும், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, ஊட்டி ஆகிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளிகளாகவும், தாம்பரம், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் நடுநிலைப் பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, ஆதரவற்ற செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 1975-ஆம் ஆண்டு தாமல்வார் தெருவில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 2004-ஆம் ஆண்டு முதல் சதாவரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு முன்பருவ பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 52 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 4 ஜோடி விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளும், விடுதி மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் 2 ஜோடி விலையில்லா சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

தருமபுரி, தஞ்சாவூரில்தான் மேல்நிலைக் கல்வி!
இந்த நிலையில், இங்கு 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வியைத் தொடர வேண்டுமானால் தஞ்சாவூர் அல்லது தருமபுரியில் இயங்கும் காதுகேளாதோர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராமாபுரம் எம்ஜிஆர் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதோடு, கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் மேல்நிலைக் கல்வியைத் தொடருவதில்லை.

தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்!

இதனால், இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து இந்தப் பள்ளியின் மாணவர்களின் தந்தை எம்.ஆறுமுகம் கூறியதாவது:

இந்தப் பள்ளியில் எனது முதல் குழந்தை 5-ஆம் வகுப்பும், 2-வது குழந்தை 2-வது வகுப்பு படித்து வருகின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் சிறப்பாக உள்ளது. ஆனால் 10-ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் நிலைதான் உள்ளது.

அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்றால், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

12-ஆம் வகுப்புக்கு பிறகு இந்த மாணவர்களுக்கென தனிக் கல்லூரி இல்லை. காதுகேளாதோர் பள்ளிகளில் உடற்கல்விக்காகத் தனி ஆசிரியர்கள் இல்லை. எனவே உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணியிடத்தையும் நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment