FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, June 26, 2015

அரசு காதுகேளாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

26.06.2015, காஞ்சிபுரம் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் சார்பில், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய நகரங்களில் மேல்நிலைப் பள்ளிகளும், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, ஊட்டி ஆகிய நகரங்களில் உயர்நிலைப் பள்ளிகளாகவும், தாம்பரம், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் நடுநிலைப் பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, ஆதரவற்ற செவித்திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 1975-ஆம் ஆண்டு தாமல்வார் தெருவில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 2004-ஆம் ஆண்டு முதல் சதாவரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு முன்பருவ பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 66 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 52 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 4 ஜோடி விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளும், விடுதி மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் 2 ஜோடி விலையில்லா சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

தருமபுரி, தஞ்சாவூரில்தான் மேல்நிலைக் கல்வி!
இந்த நிலையில், இங்கு 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது மேல்நிலைக் கல்வியைத் தொடர வேண்டுமானால் தஞ்சாவூர் அல்லது தருமபுரியில் இயங்கும் காதுகேளாதோர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

இல்லையென்றால் ராமாபுரம் எம்ஜிஆர் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதோடு, கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் மேல்நிலைக் கல்வியைத் தொடருவதில்லை.

தரம் உயர்த்தி, காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்!

இதனால், இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து இந்தப் பள்ளியின் மாணவர்களின் தந்தை எம்.ஆறுமுகம் கூறியதாவது:

இந்தப் பள்ளியில் எனது முதல் குழந்தை 5-ஆம் வகுப்பும், 2-வது குழந்தை 2-வது வகுப்பு படித்து வருகின்றனர். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் சிறப்பாக உள்ளது. ஆனால் 10-ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் நிலைதான் உள்ளது.

அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்றால், தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

12-ஆம் வகுப்புக்கு பிறகு இந்த மாணவர்களுக்கென தனிக் கல்லூரி இல்லை. காதுகேளாதோர் பள்ளிகளில் உடற்கல்விக்காகத் தனி ஆசிரியர்கள் இல்லை. எனவே உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணியிடத்தையும் நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment