FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 17, 2015

இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


சென்னை,17 June 2015
இந்து முறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரத்தை கீதா பவன் அறக்கட்டளை இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. இந்த, சுயம்வரத்தில் கலந்து காùள்ள ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இயக்குநர் அசோக்குமார் கோயல் கூறியது: கடந்த 5 ஆண்டுகளில் 248 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அறக்கட்டளையின் விதிமுறைப்படியும், சட்டத்தின் படியும் திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது.

22 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கப்பெற்றாலும், திருமணம் புரிவதற்கான சூழல் 20 சதவீதமே உள்ளது. ஆகவே, மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் சுயம்வரம் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பிறகு, சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதில், பிரிவு, மதம் ஆகியவை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசமாக நடத்தப்படுகிறது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் கூறியது: திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளிகள், மனைவியை இழந்தவர், விவாகரத்தானவர், விதவை உள்ளிட்டோர் அறக்கட்டளையின் சார்பில் மாவட்டந்தோறும் நடக்கும் சுயம்வரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். போலியோவினால் ஊனமுற்றவர், பிறவி ஊனம், வாய்பேச முடியாதோர், தவழ்ந்து செய்வோர், விபத்தினால் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண் மாற்றுத்திறனாளி 45 வயதிற்குள்ளும், பெண் மாற்றுத்திறனாளி 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பிறகு, தகுதி, விருப்பத்தின் அடிப்படையில் விரும்பிய மாற்றுத்திறனாளியை தேர்வு செய்து முழு சம்மதத்துடன் திருமணங்கள் நடத்தப்பட உள்ளது.

இத்திருமணங்கள் இந்து முறைப்படி, அரசு திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதுவரை 198 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளது. இது பாúன்ற திருமணங்களால் மாற்றுத்திறனாளிகளின் மீதுள்ள சமூக பார்வை மாறிவருகிறது.

விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை, 334, அவ்வைசண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை -86 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் சுயம்வரம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை (ஆக.23) - 94451 98100, விழுப்புரம் (ஜூலை 19) -98947 26726, திருவாரூர் (ஜூலை 26) - 94867 41985, மதுரை (ஆக.9) - 96004 50676, ஈரோடு (ஆக.16) - 80129 50771 ஆகிய மாவட்டங்களில், குறிப்பிட்ட நாளிலும், எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment