FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 3, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை

03.06.2015, புதுடில்லி : 
மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், அரசின் உதவிகளை பெறுவதற்காக அலைய வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்காக, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டை, அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 'ஆதார்' எண் போல், இந்த அட்டையிலும், ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். இந்த அட்டையில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றிய அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த அடையாள அட்டையை வைத்து, அரசின் சேவைகளை மாற்றுத்திறனாளிகள் பெறலாம். வரும் டிசம்பர் மாதம் முதல், இந்த அடையாள அட்டைக்கான பணிகள் துவங்கவுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment