FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, June 15, 2015

"மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை'

தாம்பரம்,15 June 2015


மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் பொறுப்புணர்வோடும் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு, மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பயிலரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு தொடர்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை டாக்டர் நீரதா சந்திரமோகன் வெளியிட, பாரத் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வே.கனகசபை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் சுமார் 3.48 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,வாய் பேசாமை குறைபாடு,கேட்கும் திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் வாழும் மாற்றுத் திறனாளிகள்-சிறப்புக் குழந்தைகளுக்கு சிகிச்சை, பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் குறைபாடு சான்றிதழ் அளிப்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment