FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, June 17, 2015

கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ல் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு பிருந்தா காரத் பங்கேற்கிறார்

கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2வது மாநில மாநாடு கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ம்தேதிகளில் நடைபெறுகிறது.மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஜூன் 22ம்தேதி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பாக சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பேரணி கோவில்பட்டி ராமதாஸ் பூங்காவில் தொடங்கி காந்தி மைதானத்தில் நிறைவடைகிறது. அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தாகாரத் கலந்து கொள்கிறார். மேலும் ஜூன் 23, 24ம் தேதிகளில் கோவில்பட்டியில் உள்ள தாமரை மகால் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


மாற்றுத்திறனாளிகளில் சாதனையாளர்களை கவுரவித்து பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ஜூன் 22ம்தேதி மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியாக கண்தானம் மற்றும் உறுப்பு தான முகாம் நடைபெறும்.

No comments:

Post a Comment