FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, June 17, 2015

கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ல் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு பிருந்தா காரத் பங்கேற்கிறார்

கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2வது மாநில மாநாடு கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ம்தேதிகளில் நடைபெறுகிறது.மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஜூன் 22ம்தேதி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பாக சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பேரணி கோவில்பட்டி ராமதாஸ் பூங்காவில் தொடங்கி காந்தி மைதானத்தில் நிறைவடைகிறது. அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தாகாரத் கலந்து கொள்கிறார். மேலும் ஜூன் 23, 24ம் தேதிகளில் கோவில்பட்டியில் உள்ள தாமரை மகால் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


மாற்றுத்திறனாளிகளில் சாதனையாளர்களை கவுரவித்து பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ஜூன் 22ம்தேதி மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியாக கண்தானம் மற்றும் உறுப்பு தான முகாம் நடைபெறும்.

No comments:

Post a Comment