FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, June 17, 2015

கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ல் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு பிருந்தா காரத் பங்கேற்கிறார்

கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2வது மாநில மாநாடு கோவில்பட்டியில் ஜூன் 22, 23, 24ம்தேதிகளில் நடைபெறுகிறது.மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஜூன் 22ம்தேதி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பாக சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பேரணி கோவில்பட்டி ராமதாஸ் பூங்காவில் தொடங்கி காந்தி மைதானத்தில் நிறைவடைகிறது. அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தாகாரத் கலந்து கொள்கிறார். மேலும் ஜூன் 23, 24ம் தேதிகளில் கோவில்பட்டியில் உள்ள தாமரை மகால் மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


மாற்றுத்திறனாளிகளில் சாதனையாளர்களை கவுரவித்து பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ஜூன் 22ம்தேதி மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியாக கண்தானம் மற்றும் உறுப்பு தான முகாம் நடைபெறும்.

No comments:

Post a Comment