FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, August 5, 2015

25 லட்சம் மாற்றுதிறன் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

05.08.2015, புதுடெல்லி: ‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 லட்சம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 405 சிறப்பு பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2014-15ம் கல்வியாண்டில் இதுவரை 52,624 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்த தகவலின்படி, 2013-14ம் கல்வியாண்டில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 907 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு வர இயலாத அதிகம் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி கற்கும் வசதியையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment