FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, August 5, 2015

25 லட்சம் மாற்றுதிறன் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

05.08.2015, புதுடெல்லி: ‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 லட்சம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 405 சிறப்பு பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2014-15ம் கல்வியாண்டில் இதுவரை 52,624 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்த தகவலின்படி, 2013-14ம் கல்வியாண்டில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 907 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு வர இயலாத அதிகம் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி கற்கும் வசதியையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment