FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, August 5, 2015

25 லட்சம் மாற்றுதிறன் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

05.08.2015, புதுடெல்லி: ‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 லட்சம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 405 சிறப்பு பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2014-15ம் கல்வியாண்டில் இதுவரை 52,624 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை அளித்த தகவலின்படி, 2013-14ம் கல்வியாண்டில் 25 லட்சத்து 3 ஆயிரத்து 907 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு வர இயலாத அதிகம் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு அவரவர் வீட்டிலேயே கல்வி கற்கும் வசதியையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment