FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, August 11, 2015

கோவிலுக்கு வந்த DEAF மாற்றுத்திறனாளி மாயம்

11.08.2015, திருத்தணி: முருகன் கோவிலுக்கு வந்த, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மாயமானார்.சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, பாலைய்யாகொத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது, மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவர்). கடந்த, 7ம் தேதி, குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.பின், மொட்டை அடிப்பதற்காக அங்குள்ள கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அவரது தந்தை வந்து பார்த்தபோது, அவர் மாயமானது தெரிந்தது.தொடர்ந்து மலைக்கோவில், திருத்தணி நகரில் தேடியும் கிடைக்காததால், நேற்று, திருத்தணி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment