FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, August 12, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் DEAF கீதாவிற்கு உரிமை கோரும் 4 தம்பதியர்



பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண் கீதா தங்கள் மகள் தான் என நான்கு மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் இந்திய பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

அந்த அனாதை பெண்ணின் பெயர் கீதா என்று தெரியவந்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த பெண்ணை தாய்நாட்டிற்கு அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கராச்சி சென்று கீதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். கீதாவின் புகைப்படம் தொலைகாட்சிகளில் வெளியானதும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒரு வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி அந்த பெண் தங்கள் மகள் தான் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தங்கள் மகள் அமிர்தசரசிலிருந்து விவரம் அறியாமல் வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

ஆனால், அடுத்தடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் கீதா தங்கள் மகள் தான் என உரிமை கோரினர். பலர் கீதாவை உரிமை கோருவதால் அந்த தம்பதிகளை பற்றி விவரம் அரிய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறியுள்ளார்.

இந்திய தூதரிடம், கீதா தாங்கள் ஏழு சகோதர சகோரதிகள் என்று கூறியதாகவும், இந்த விவரத்தை பயன்படுத்தி கீதாவை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது பெற்றோருடன் வைஷ்ணோ தேவி கோவிலிற்கு சென்றதாகவும் கீதா கூறியுள்ளதாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கீதாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.

தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

No comments:

Post a Comment