FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, August 12, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் DEAF கீதாவிற்கு உரிமை கோரும் 4 தம்பதியர்



பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண் கீதா தங்கள் மகள் தான் என நான்கு மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் இந்திய பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

அந்த அனாதை பெண்ணின் பெயர் கீதா என்று தெரியவந்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த பெண்ணை தாய்நாட்டிற்கு அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கராச்சி சென்று கீதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். கீதாவின் புகைப்படம் தொலைகாட்சிகளில் வெளியானதும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒரு வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி அந்த பெண் தங்கள் மகள் தான் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தங்கள் மகள் அமிர்தசரசிலிருந்து விவரம் அறியாமல் வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

ஆனால், அடுத்தடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் கீதா தங்கள் மகள் தான் என உரிமை கோரினர். பலர் கீதாவை உரிமை கோருவதால் அந்த தம்பதிகளை பற்றி விவரம் அரிய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறியுள்ளார்.

இந்திய தூதரிடம், கீதா தாங்கள் ஏழு சகோதர சகோரதிகள் என்று கூறியதாகவும், இந்த விவரத்தை பயன்படுத்தி கீதாவை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது பெற்றோருடன் வைஷ்ணோ தேவி கோவிலிற்கு சென்றதாகவும் கீதா கூறியுள்ளதாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கீதாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.

தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

No comments:

Post a Comment