FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, August 12, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் DEAF கீதாவிற்கு உரிமை கோரும் 4 தம்பதியர்



பாகிஸ்தானில் அனாதையாக தவிக்கும் இந்திய பெண் கீதா தங்கள் மகள் தான் என நான்கு மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் உரிமை கோரியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் இந்திய பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சமூக நல அமைப்பின் பொறுப்பில் இருந்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

அந்த அனாதை பெண்ணின் பெயர் கீதா என்று தெரியவந்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த பெண்ணை தாய்நாட்டிற்கு அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கராச்சி சென்று கீதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். கீதாவின் புகைப்படம் தொலைகாட்சிகளில் வெளியானதும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒரு வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி அந்த பெண் தங்கள் மகள் தான் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல், தங்கள் மகள் அமிர்தசரசிலிருந்து விவரம் அறியாமல் வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார் என்றும் கூறினார்.

ஆனால், அடுத்தடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தம்பதிகள் கீதா தங்கள் மகள் தான் என உரிமை கோரினர். பலர் கீதாவை உரிமை கோருவதால் அந்த தம்பதிகளை பற்றி விவரம் அரிய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் இன்று கூறியுள்ளார்.

இந்திய தூதரிடம், கீதா தாங்கள் ஏழு சகோதர சகோரதிகள் என்று கூறியதாகவும், இந்த விவரத்தை பயன்படுத்தி கீதாவை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது பெற்றோருடன் வைஷ்ணோ தேவி கோவிலிற்கு சென்றதாகவும் கீதா கூறியுள்ளதாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கீதாவை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் ரயில் நிலையத்தில், 14 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து சென்ற ரயிலில் 9 வயது வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி அனாதையாக சென்றுள்ளாள்.

தற்போது 23 வயது ஆகும் கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

No comments:

Post a Comment