FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, August 13, 2015

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசு

13.08.2015, திருவள்ளூர்:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்து, தமிழ் மொழியை பயிற்று மொழியாக பயின்று, பொதுத் தேர்வில் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பெற்ற, செவித்திறனற்ற, பேச இயலாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆறு பேருக்கு, ரொக்கப்பரிசு மற்றும் விடுதி கட்டணம் வழங்கும் திட்டத்தின் கீழ், மொத்தம் 1 லட்சத்து 9,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment