FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 4, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய DEAF மாற்றுத்திறனாளி பெண்: தூதருக்கு சுஷ்மா உத்தரவு

புது தில்லி, 03 August 2015
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் தன்னந்தனியாக கண்டெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண், தனது பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

9 வயதில் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தற்போது 24 வயதாகிறது. காப்பகத்தில் வளர்ந்து வரும் சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளுக்கு பேசவோ, காது கேட்கவோ இயலாது என்பதால், அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திடீர் திடீரென எதையோ நினைத்து அழுவாள் என்றும், அவள் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும், அவளை பராமரித்து வரும் எதி அறக்கட்டளையின் தலைவர் பில்கீஸ் எதி கூறுகிறார்.

No comments:

Post a Comment