FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, August 4, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய DEAF மாற்றுத்திறனாளி பெண்: தூதருக்கு சுஷ்மா உத்தரவு

புது தில்லி, 03 August 2015
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் தன்னந்தனியாக கண்டெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண், தனது பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

9 வயதில் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தற்போது 24 வயதாகிறது. காப்பகத்தில் வளர்ந்து வரும் சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளுக்கு பேசவோ, காது கேட்கவோ இயலாது என்பதால், அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திடீர் திடீரென எதையோ நினைத்து அழுவாள் என்றும், அவள் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும், அவளை பராமரித்து வரும் எதி அறக்கட்டளையின் தலைவர் பில்கீஸ் எதி கூறுகிறார்.

No comments:

Post a Comment