FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, August 6, 2015

மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக உண்ணாவிரதம் : பல்வேறு கட்சியினர் ஆதரவு

டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை சேப்பாக்கத்தில் 3 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாளின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்ட இடத்திற்கு நேரில் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்ட குழுவினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியினர், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளி தேவி மற்றும் அபர்ணா மயக்கமடைந்ததை அடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment