FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, August 6, 2015

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

சென்னை, 01 August 2015
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிப் படிப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அரசு வேலைகோரி தங்களது படிப்புகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றன.
அதன்படி, ஜூன் மாத நிலவரப்படி அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. அதில், பெண்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆக இருக்கிறது.
சிறப்புப் பிரிவின் கீழ் இலங்கை வாழ் மாணவர்கள் 934 பேரும், கலப்புத் திருமணம் செய்தவர்களில் 39 ஆயிரத்து 721 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 719 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
வகுப்பு வாரியாக தகவல் வெளியீடு: வேலைவாய்ப்பு கோரி, பதிவு செய்தவர்களில் வகுப்பு வாரியாகவும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 லட்சத்து 65 ஆயிரத்து 77 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 22 லட்சத்து 26 ஆயிரத்து 826 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 லட்சத்து 81 ஆயிரத்து 433 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment