FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, August 25, 2015

விருதுநகரில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 37 பேர் கைது

விருதுநகர், 25 August 2015
 விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பகம், முருகேஸ்வரி, அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க ஆண்கள் இருக்கக் கூடாது, ரூ.5000 மதிப்புக்கு மேல் சொத்து இல்லாமல் இருப்பது போன்ற பொல்லாத விதிமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. தற்போது, கடந்த ஏப்.17ம் தேதி வெளியிட்ட அரசாணையில் உதவித் தொகை பெற அனாதையாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இம்மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாசி-21 பேரும், அருப்புக்கோட்டை-11 பேரும், ராஜபாளையம்-54 பேரும், சாத்தூர்-69 பேரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பேரும் என மொத்தம் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment