FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, August 14, 2015

சாகும்வரை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்: 3 பேர் மயக்கம்!

14.08.2015, மதுரை:
 மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 2வது நாளாக மதுரையில் இன்று நடத்தி வருகிறார்கள். காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர், மயக்கமடைந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வந்த ஆம்புலன்சும் ரிப்பேர் ஆகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து, தாமதமாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இவர்களின் பிரச்னைகளை கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



போராட்டக்குழுவினரிடம் பேசினோம். "படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். வங்கி கடன் தர வேண்டும். ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகளையும், பொதுக்கழிப்பிடங்களையும் மாற்று திறனாளிகள் நிர்வாகிக்க தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவார் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தைப்போல கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். எங்கள் பிரச்னைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் வாழும் 24 லட்சம் மாற்று திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, அமைச்சரோ எங்கள் பிரச்னைகளை கேட்க வரவில்லை. அதனால்தான் சாகும் வரை போராட்டத்தில் இறங்கி விட்டோம்" என்றார்கள்.

நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படும் சூழலில் மாற்று திறனாளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

No comments:

Post a Comment