FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, August 14, 2015

சாகும்வரை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்: 3 பேர் மயக்கம்!

14.08.2015, மதுரை:
 மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 2வது நாளாக மதுரையில் இன்று நடத்தி வருகிறார்கள். காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர், மயக்கமடைந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வந்த ஆம்புலன்சும் ரிப்பேர் ஆகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து, தாமதமாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இவர்களின் பிரச்னைகளை கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



போராட்டக்குழுவினரிடம் பேசினோம். "படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். வங்கி கடன் தர வேண்டும். ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகளையும், பொதுக்கழிப்பிடங்களையும் மாற்று திறனாளிகள் நிர்வாகிக்க தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவார் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தைப்போல கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். எங்கள் பிரச்னைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் வாழும் 24 லட்சம் மாற்று திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, அமைச்சரோ எங்கள் பிரச்னைகளை கேட்க வரவில்லை. அதனால்தான் சாகும் வரை போராட்டத்தில் இறங்கி விட்டோம்" என்றார்கள்.

நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படும் சூழலில் மாற்று திறனாளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

No comments:

Post a Comment